இலங்கையின் இடைக்கால அதிபரானார் ரணில் விக்ரமசிங்கே.. நாளைக்கு நாடாளுமன்றத்துல எடுக்க இருக்கும் முக்கிய முடிவு.. முழுவிபரம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே இன்று பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார்.

இலங்கையின் இடைக்கால அதிபரானார் ரணில் விக்ரமசிங்கே.. நாளைக்கு நாடாளுமன்றத்துல எடுக்க இருக்கும் முக்கிய முடிவு.. முழுவிபரம்..!

Also Read | மாற்றுத் திறனாளி சிறுவனுடன் ஜாலியாக விளையாடும் நண்பர்கள்.. IPS அதிகாரி ஷேர் செஞ்ச நெகிழ்ச்சியான வீடியோ..!

வெடித்த போராட்டம்

கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்துவந்த இலங்கையில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் கடந்த வாரம் தடையை மீறி நுழைந்தனர். மேலும், மாளிகையில் இருக்கும் அறைகள் மற்றும் நீச்சல் குளங்களை போராட்டக்காரர்கள் பயன்படுத்தும் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வந்தன. அதிபர் மற்றும் பிரதமர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது என போராட்டக்காரர்கள் தெரிவித்திருந்தனர்.

தப்பிய அதிபர்

இதனிடையே பதவி விலகுவதாக அறிவித்திருந்த கோத்தபய, திடீரென தனது மனைவி மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் மாலத்தீவுகளுக்கு தப்பிச் சென்றார். இதனால் பொறுப்பு அதிபராக ரணில் விக்ரமசிங்கே-வை நியமித்திருந்தார் கோத்தபய. மேலும், நாடு முழுவதும் அவசரநிலையை பிரகடனம் செய்வதாகவும், மேற்கு பிராந்தியங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்துவதாகவும் நேற்று அறிவித்திருந்தார் ரணில்.

இதனை தொடர்ந்து, சவூதி அரேபிய விமானம் மூலமாக நேற்று மாலை சிங்கப்பூர் சென்றடைந்த கோத்தபய தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்து சபாநாயகருக்கு மின்னஞ்சல் அனுப்பினார். இதனை இலங்கை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதை அடுத்து இலங்கையின் இடைக்கால அதிபராக இன்று பதிவியேற்றுக்கொண்டார் ரணில் விக்ரமசிங்கே.

Ranil Wickremesinghe takes oath as acting President

7 நாளில் புதிய அதிபர்

இந்நிலையில், நாளை இலங்கையின் நாடாளுமன்றம் கூடுவதாக சபாநாயகர் அறிவித்திருக்கிறார். அடுத்த 7 நாட்களில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பது குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற இருக்கிறது. இதன்மூலமாக இன்னும் 7 நாட்களில் புதிய அதிபர் தேர்நதெடுக்கப்படுவார் என சபாநாயகர் அறிவித்துள்ளார். அதுவரை ரணில் இலங்கையின் இடைக்கால அதிபராக பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | "மனைவி தன்னோட கணவனுக்கு செய்யக்கூடிய அதிகபட்ச கொடுமை இது".. விவாகரத்து வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வெளியிட்ட கருத்து..!

RANIL WICKREMESINGHE, PRESIDENT, SRI LANKA

மற்ற செய்திகள்