Kadaisi Vivasayi Others

இதை செஞ்சா ஆண் குழந்தை பிறக்கும்.. மந்திரவாதி பேச்சை கேட்டு கர்ப்பிணி செய்த விபரீதம்.. மிரண்டுபோன மருத்துவர்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆண் குழந்தை பிறக்கவேண்டும் என மாந்திரீகரின் பேச்சைக் கேட்டு கர்ப்பிணி பெண் செய்த வீபரீத செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை செஞ்சா ஆண் குழந்தை பிறக்கும்.. மந்திரவாதி பேச்சை கேட்டு கர்ப்பிணி செய்த விபரீதம்.. மிரண்டுபோன மருத்துவர்கள்..!

கொரோனாவை செயலிழக்க செய்யும் புதிய வகை மாஸ்க்.. ஒரு லேயரில் தாமிர நானோ துகள்கள்.. விஞ்ஞானிகள் அசத்தல் கண்டுபிடிப்பு

கர்ப்பிணி

பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியிலுள்ள பேஷ்வர் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் கர்ப்பம் தரித்துள்ளார். ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மருத்துவமனையில் ஸ்கேன் செய்து பார்த்துள்ளார். அப்போது மீண்டும் பெண் குழந்தைதான் கருவில் உருவாகி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாந்திரீகர்

இதனை அடுத்து உடனே மாந்திரீகர் ஒருவரை அப்பெண் நாடியிருக்கிறார். அவர், தலையில் ஆணியடித்துக்கொண்டால் ஆண் குழந்தை பிறக்கும் என கூறியுள்ளார். மாந்திரீகரின் பேச்சை நம்பிய அந்தப் பெண், தனது உச்சந்தலையில் தானே ஆணி அடித்துள்ளார். ஆனால் சிறிது நேரத்திலேயே வலி தாங்க முடியாமல் ஆணியை பிடுங்க முயற்சித்திருக்கிறார்.

தலையில் ஆணி

ஆனால் எவ்வளவு முயன்றும் அவரால் ஆணியை வெளியே எடுக்கமுடியவில்லை. இதனை அடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அங்கு அப்பெண்ணின் தலையை எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்ததில், 2 இன்ச் அளவிற்கு ஆணி தலையில் இறங்கியிருந்ததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக ஆணி மூளையை தொடவில்லை.

மருத்துவமனையில் இருந்து மாயம்

Pregnant woman had nail hammered into head for baby boy

உண்மையான காரணத்தை சொல்லியே அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால், அது சட்டத்திற்கு புறம்பானது என தெரிந்தவுடனே மருத்துவமனையிலிருந்து மாயமாகியுள்ளார். உடனே அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ஹைதர் கான் என்பவர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனை அடுத்து மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அப்பெண்ணை போலீசார் தேடிவருகின்றனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து கூறிய போலீசார், ‘விரைவில் அந்த கர்ப்பிணி பெண் கண்டுபிடிக்கப்படுவார். அதேபோல் அவருக்கு இதுபோன்ற நம்பிக்கை அளித்த மாந்திரீகரும் விரைவில் கைது செய்யப்படுவார்’ என தெரிவித்துள்ளனர். ஆண் குழந்தைக்காக கர்ப்பிணி பெண் தனது தலையில் ஆணி அடித்துக்கொண்ட சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடுவானில் கேட்ட பெண்ணின் அலறல் சத்தம்.. விமானத்துல எல்லாரும் தூங்கிட்டு இருந்த நேரம் பார்த்து.. பயணி செய்த காரியம்

PREGNANT WOMAN, HAMMER, HEAD, BABY BOY, FAITH HEALER, ஆண் குழந்தை, மந்திரவாதி, மருத்துவர்கள், கர்ப்பிணி

மற்ற செய்திகள்