VIDEO: 'இத அவங்க கொஞ்சமும் எதிர்பார்க்கல...' 'அபராதம் தான் வாங்க பக்கத்துல வரார்னு பார்த்தா, டக்குன்னு...' - ஆனா சிசிடிவி வீடியோல வசமா சிக்கிட்டார்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பெரு நாட்டில் கொரோனா ஊரடங்கை மீறிய பெண்ணிற்கு முத்தமிட்ட போலீஸ் அதிகாரியை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

VIDEO: 'இத அவங்க கொஞ்சமும் எதிர்பார்க்கல...' 'அபராதம் தான் வாங்க பக்கத்துல வரார்னு பார்த்தா, டக்குன்னு...' - ஆனா சிசிடிவி வீடியோல வசமா சிக்கிட்டார்...!

பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் கொரோனா ஊரடங்கை கண்காணிக்க காவல்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கொரோனா ஊரடங்கை மீறிய ஒரு அழகிய பெண்மணி போலீசாரிடம் சிக்கியுள்ளார்.

அந்த பெண்ணிடம் அபராதத்தை வாங்க சென்ற போலீஸ் அதிகாரிகளில் ஒருவர், அந்த பெண்மணியை உதட்தோடு உதடு முத்தமிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இதை சற்றும் எதிர்பாராத பெண்மணி அதிர்ச்சியடைந்தார்.

இந்த நிகழ்வானது அருகிலிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல் உள்ளூர் தொலைக்காட்சியிலும் இந்த சம்பவம் குறித்தான வீடியோ வெளியாகி வைரலானது.

அதையடுத்து, ஊரடங்கில் தன் பணியை செய்யாமல் பெண்ணை முத்தமிட்ட காரணத்தால் காவல்துறை அதிகாரி சஸ்பென்ட் செய்யப்பட்டார்.

 

மற்ற செய்திகள்