'இந்தியாவுக்கு அடுத்த தடுப்பூசி ரெடி'!.. இவ்வளவு நாட்கள் தாமதம் ஏன்'?.. ஃபைசர் நிறுவனத்துக்கு இருக்கும் 'ஒரே சிக்கல்'!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கோவேக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக்-V தடுப்பூசிகளை அடுத்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபைசர் தடுப்பூசி இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ளது.

'இந்தியாவுக்கு அடுத்த தடுப்பூசி ரெடி'!.. இவ்வளவு நாட்கள் தாமதம் ஏன்'?.. ஃபைசர் நிறுவனத்துக்கு இருக்கும் 'ஒரே சிக்கல்'!

அமெரிக்காவின் முன்னணி மருந்து நிறுவனமான 'ஃபைசர்', கொரோனா தடுப்பூசி தயாரித்து பல நாடுகளுக்கு விநியோகித்து வருகிறது.

வாஷிங்டனில், அமெரிக்க - இந்திய வர்த்தக கூட்டமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், 'ஃபைசர்' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆல்பர்ட் பவுர்லா கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், "இந்த ஆண்டு 300 கோடி டோஸ் தடுப்பூசியும், அடுத்த ஆண்டு 400 கோடி தடுப்பூசியும் உற்பத்தி செய்வோம். இந்தியா உள்ளிட்ட நடுத்தர, குறைந்த வருவாய் நாடுகளுக்கு 200 கோடி டோஸ் தடுப்பூசி வழங்க திட்டம் வகுத்துள்ளோம்.

இந்தியாவில் ஃபைசர் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டால் மட்டுமே நாங்கள் விநியோகிக்க முடியும். தற்போது, அங்கீகாரம் பெறும் பணிகள் நடந்து வருகின்றன. அதையடுத்து, இந்தியாவுக்கு தடுப்பூசி விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்படும். அது விரைவில் நடைபெறும் என நம்புகிறேன்.

உள்நாட்டில் சீரம் நிறுவனம் தயாரித்த தடுப்பூசிகள் இந்திய மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முதுகெலும்பாக திகழும். அத்துடன், எங்களது தடுப்பூசிகளும் முக்கிய பங்கு வகிக்கும்.

கொரோனா உச்சத்தில் இருந்தபோது, இந்தியா நரகத்தையே கடந்து வந்தது. இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் நல்ல பலனை அளித்துள்ளன" என்று கூறியுள்ளார்.

 

மற்ற செய்திகள்