"திடீரென வெடித்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு!".. 7 பேர் பலி.. 70 பேர் படுகாயம்! மசூதியில் நடந்த அதிபயங்கர சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணத்தில் உள்ள பெஷாவர் நகரின் டிர் காலனியில் ஸ்பன் ஜமாத் மசூதியின் ஒரு பகுதியில் இருந்த மத பாடசாலையில் டிர் காலனியை சேர்ந்த சிறுவர்கள கல்வி கற்று வந்தனர்.

"திடீரென வெடித்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு!".. 7 பேர் பலி.. 70 பேர் படுகாயம்! மசூதியில் நடந்த அதிபயங்கர சம்பவம்!

இந்நிலையில், அந்த மதபாடசாலை இருந்த மசூதியின் மையப்பகுதியில் இன்று காலை 8.30 மணியளவில் திடீரென நடந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் சிறுவர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். 70-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து விசாரித்தும் வருகின்றனர்.

மற்ற செய்திகள்