பாகிஸ்தானில் இருந்து காதலனை கரம்பிடிக்க இந்தியா வந்த இளம்பெண்... ஒரே வாட்சப் காலில் மாறிப்போன வாழ்க்கை..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பாகிஸ்தானில் இருந்து காதலனை கரம் பிடிக்க இந்தியா வந்த இளம் பெண் வாழ்க்கையில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

பாகிஸ்தானில் இருந்து காதலனை கரம்பிடிக்க இந்தியா வந்த இளம்பெண்... ஒரே வாட்சப் காலில் மாறிப்போன வாழ்க்கை..

                         Images are subject to © copyright to their respective owners.

Also Read | "LKG, UKG -க்கு ரூ‌.50 ஆயிரம், 1 லட்சமா‌?".. புதுச்சேரி முதல்வர் சொல்லும் மாற்றுவழி..!

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்தவர் முலாயம் சிங் யாதவ். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆன்லைனில் லூடோ விளையாட துவங்கியுள்ளார். அந்த விளையாட்டில் தனது பெயர் சமீர் அன்சாரி என இவர் குறிப்பிட்டு இருக்கிறார். அப்போது அவருக்கு இக்ரா ஜிவானி  என்னும் பெண்ணின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. பாகிஸ்தானை சேர்ந்த இக்ரா தொடர்ந்து சமீர் அன்சாரி என்ற முலாயமுடன் பேசி வந்திருக்கிறார். இது காதலாக மாறிய நிலையில் இக்ராவின் வீட்டில் திருமணம் தொடர்பான பேச்சுகளும் எழுந்திருக்கின்றன.

Pakistan Woman who entered india to marry her lover both arrested

Images are subject to © copyright to their respective owners.

இதனை அறிந்த முலாயம் சிங் யாதவ் நேபால் வழியாக இந்தியாவிற்குள் வரும்படி ஆலோசனை கூறியிருக்கிறார். அதன்பின்னர், கடந்த ஆண்டு செப்டம்பரில் நேபாளம் வந்து அங்கிருந்து பாட்னா வழியாக பெங்களூருக்கு சென்று இருக்கிறார் இக்ரா. இருவருக்கும் திருமணமான நிலையில் இருவரும் பெங்களூரின் பெல்லந்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்திருக்கின்றனர். இதனிடையே தனது மனைவிக்கு ரியா யாதவ் எனும் பெயரில் போலி ஆதார் அட்டையை முலாயம் சிங் யாதவ் பெற்றிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Pakistan Woman who entered india to marry her lover both arrested

Images are subject to © copyright to their respective owners.

காலங்கள் இப்படிச் செல்ல, வித்தியாசமான வழியில் இவர்களுக்கு ஒரு சோதனை வந்திருக்கிறது. வீட்டை விட்டு பிரிந்து வந்த இக்ரா பாகிஸ்தானின் ஹைதராபாத்தில் வசித்து வரும் தனது தாயுடன் வாட்சப் மூலம் பேசத் தொடங்கியுள்ளார். வாட்ஸ் அப்பில் தாயுடன் அடிக்கடி இக்ரா போன் பேசி வந்த நிலையில் இதைப் பற்றி முலாயமும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சமீபத்தில் பெங்களூருவில் நடைபெறவிருக்கும் ஜி20 நிகழ்ச்சி மற்றும் ஏர் ஷோவை கருத்தில் கொண்டு பெங்களூரு காவல்துறையினர் உளவு அமைப்புடன் வழக்கமான பரிசோதனையில் இறங்கினர்.

அப்போது அந்த பகுதியில் இருந்து பாகிஸ்தானிற்கு அடிக்கடி ஒரு போன் கால் பேசப்படுவது தெரிய வந்திருக்கிறது. இதனை அடுத்து அந்த காலை ட்ராக் செய்து இக்ராவை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் இல்லை தாண்டிய காதல் என்பது தெரிய வந்திருக்கிறது. அதன்பிறகு ஜனவரி 20 அன்று இக்ரா வெளிநாட்டினர் பிராந்திய பிரிவில்  ஒப்படைக்கப்பட்டார். அங்கிருந்து அட்டாரி எல்லை வழியாக பாகிஸ்தான் அதிகாரிகளிடத்தில் இக்ரா ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்.

Pakistan Woman who entered india to marry her lover both arrested

Images are subject to © copyright to their respective owners.

அதே நேரத்தில் போலி ஆவணங்களை தயாரித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் கைது செய்யப்பட்ட முலாயம் சிங் யாதவ் தற்போது நீதிமன்ற காவலில் இருக்கிறார். இதனிடைய முலாயம் சிங் யாதவின் பெற்றோர் தங்களது மகன் மற்றும் மருமகள் ஆகிய இருவரையும் சுதந்திரமாக வாழ அனுமதிக்க வேண்டும் எனவும் இக்ரா தங்களது மருமகள் என்றும் அவர் எந்த மதத்தினை சேர்ந்தவராக இருந்தாலும் தாங்கள் அவரை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

பாகிஸ்தானில் இருந்து தனது காதலனை கரம் பிடிக்க இந்தியா வந்த இக்ரா மீண்டும் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட நிலையில் முலாயம் சிங் யாதவ் தற்போது விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read | 512 கிலோ வெங்காயத்தை விற்க 70 கிமீ பயணித்த விவசாயி.. கொடுத்த தொகையை பார்த்து கண்ணீர் விட்ட சோகம்..!

PAKISTAN, PAKISTAN WOMAN, MARRY, LOVER

மற்ற செய்திகள்