'இலங்கை குண்டுவெடிப்பு நிகழ்ந்த நட்சத்திர ஹோட்டலில் இருந்த தமிழ் நடிகை’!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இலங்கை குண்டுவெடிப்பு நிகழ்ந்த நட்சத்திர விடுதி ஒன்றில் நடிகை ராதிகா இருந்துள்ள தகவல் உறுதியாகியுள்ளது. அதுபற்றி ராதிகா ஒரு ட்வீட்டும் பதிவிட்டுள்ளார்.

'இலங்கை குண்டுவெடிப்பு நிகழ்ந்த நட்சத்திர ஹோட்டலில் இருந்த தமிழ் நடிகை’!

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகைக் கொண்டாட்டங்கள் கோலகலமாக கொண்டாடப்பட்டுக்கொடிருந்த நேரம் அங்குள்ள கொழும்புவில் உள்ள தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் நடந்த குண்டு வெடிப்பில் 100 பேர் பலி, 280 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஈஸ்டர் திருநாளில் கொச்சிக்கடை, கட்டுவாபிட்டியா உள்ளிட்ட இடங்களில் உள்ள தேவாலயங்கள் மீது நிகழ்த்தப்பட்ட இந்த குண்டுவெடிப்புத் தாக்குதலில் பலி எண்ணிக்கையும், காயம் பட்டோர் எண்ணிக்கையும் அடுத்தடுத்து அதிகமாகிக்கொண்டே வந்த நிலையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்த ஹோட்டலில் தமிழ் நடிகையும் தயாரிப்பாளருமான ராதிகா சரத்குமார்  இருந்ததாக தகவல் வெளியானது.

இந்த தகவல் உண்மைதான் என்பதை நிரூபிக்கும் வகையிலும், அதே சமயம் தான் பாதுகாப்பாக உள்ளதை உறுதி செய்யும் வகையிலும் ராதிகா சரத்குமார் ட்விட்டரில் ஒரு முக்கிய பதிவினை போட்டுள்ளார். அதன்படி, ‘அடக் கடவுளே.. இலங்கையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. ஆனால் கடவுள் எங்கள் அனைவருடனும் இருக்கிறார். நான் கொழும்புவில் உள்ள சின்னமோன் கிராண்ட் ஹோட்டலில் இருந்து தற்போதுதான் காலி செய்தோம். ஆனால் உடனே அங்கு குண்டுவெடித்துள்ளது. இந்த செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது. ஆனால் நம்ப முடியாததாக உள்ளது’ என்று நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவில் இருந்து அவர் குண்டுவெடிப்பில் எவ்விதத்திலும் சிக்கிக்கொள்ளவில்லை என்கிற தகவல் கிடைத்துள்ளது. அதே சமயம் இலங்கையில் இறந்தோர்களின் எண்ணிக்கை 100க்கும் மேற்பட்டதாக இருப்பதால் நாடு முழுவதும் சோகம் சூழ்ந்துள்ளது.

RADIKKAASARATHKUMAR