VIDEO : "எனக்கும், என் புள்ளைங்களுக்கும் கெடச்ச 'வரம்'ங்க அது, அத போய்"... 'அந்த' ஒரே காரணத்துக்காக... 'மனைவி', குழந்தைகளை கைவிட்ட 'கணவர்'!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

நைஜீரியாவை சேர்ந்த ரிஷிகாட் என்ற பெண்ணிற்கு சிறு வயதில் இருந்தே அழகிய நீல நிறக் கண்கள் இருந்துள்ளன.

VIDEO : "எனக்கும், என் புள்ளைங்களுக்கும் கெடச்ச 'வரம்'ங்க அது, அத போய்"... 'அந்த' ஒரே காரணத்துக்காக... 'மனைவி', குழந்தைகளை கைவிட்ட 'கணவர்'!!

இந்நிலையில், இவருக்கு அப்துல்வாய்சூ ஓமோ தாதா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. கணவருக்கு மனைவியின் நீல நிற கண்கள் மீது ஆரம்பத்தில் அதிக அன்பு இருந்துள்ளது. ஆனால், இந்த தம்பதியருக்கு பிறந்த முதல் குழந்தைக்கும் நீல நிற கண்கள் இருந்துள்ளது. இதன் காரணமாக, கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, அடுத்து பிறந்த குழந்தைக்கும் தாயைப் போல நீல நிற கண்கள் இருந்துள்ளது. மனைவி மற்றும் குழந்தைகள் என அனைவருக்கும் நீல நிற கண்கள் இருந்ததால் கணவர் அதிகம் கோபமடைந்துள்ளார். மனைவியுடன் பேசுவதை தவிர்த்து வந்த ஓமோ, மனைவி மற்றும் குழந்தைகளை தவிக்க விட்டுச் சென்றுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து ரிஷிகாட் கூறுகையில், 'சிறு வயது முதலே எனக்கு நீல நிற கண்கள் இருந்துள்ளது. எனது தாய், தந்தை என இருவரின் குடும்பத்தில் யாருக்கும் இப்படி கண்கள் இல்லை என்பதால் அனைவரும் இது நோயாக இருக்குமோ என பயந்தனர். நான் பள்ளியில் படித்த போது, ஆசிரியர்களும் அப்படி நினைத்தனர். ஆனால், எனது சிறு வயதில் மருத்துவமனை சென்று பரிசோதித்த போது, மருத்துவர்கள் எனது கண்களுக்கு எதுவும் பிரச்சனை இல்லை என்றும் அவர்களுக்கு எனது கண்கள் மிகவும் பிடித்து விட்டதாகவும் தெரிவித்தனர். எனக்கும் இன்று வரை எனது கண்களில் குறைபாடு இருந்ததாக தோன்றியதில்லை' என்றார்.

மேலும், 'என்னை புதிதாக பார்ப்பவர்கள் எனது கண்களுக்கு கோளாறு இருக்குமோ என நினைத்து கொள்வர். எனக்கு திருமணம் முடிந்த தொடக்கத்தில் எனது கண்களின் மீது கணவருக்கு அதிக ஈர்ப்பு இருந்தது. ஆனால், எனது குழந்தைகளுக்கும் நீல கண்கள் இருந்ததால் அவர் அடிக்கடி என்னுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். கணவரின் குடும்பத்தாரும் இதுகுறித்து தவறாக பேசினர். இதன் காரணமாக, என்னையும் எனது குழந்தைகளையும் தனியாக தவிக்க விட்டு கணவர் சென்று விட்டார். உணவுக்கு வழியில்லாத காரணத்தால் எனது தாய் வீட்டில் தங்கி வருகிறோம்' என உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வீடியோ ஒன்று இணையதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்