'40 பொண்ணுங்கள பாலியல் வல்லுறவு செய்த நபர்...' வீட்ல பொண்ணு இருந்தாலே வேலி ஏறி குதிச்சிடுவாராம்... 10 வயசு குழந்தை முதல் 80 வயசு பாட்டி வரை யாரையும் விடல...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

நைஜீரியாவின் வடக்கு நகரமான டங்கோராவில் கடந்த நான்கு ஆண்டுகளாக 10 வயது சிறுமிகள் முதல் 80 வயது பெண்கள் வரை பலரை பாலியல் வல்லுறவு செய்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதுள்ளனர்.

'40 பொண்ணுங்கள பாலியல் வல்லுறவு செய்த நபர்...' வீட்ல பொண்ணு இருந்தாலே வேலி ஏறி குதிச்சிடுவாராம்... 10 வயசு குழந்தை முதல் 80 வயசு பாட்டி வரை யாரையும் விடல...!

நைஜீரியாவில் அண்மையில்  பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்படும் செய்தி அதிகளவில் நடைபெற்று வருகிறது. இதில் பாலியல் வன்கொடுமை ஒரு தேசிய பிரச்சனையாக பார்க்கபட்டு பல்லாயிரக்கணக்கான பெண்கள் இணைந்து ஒரு மனுவில் கையெழுத்திட்டு #WeAreTired என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் ஆக்கினார்.

இந்நிலையில் வடக்கு நகரமான டங்கோராவில் இருக்கும் ஒரு வீட்டிலில் தாய் தன் மகளின் அறைக்கு நுழையும் போது அங்கிருந்து ஒரு மர்ம நபர் இவரை பார்த்ததும் ஓட்டம் பிடித்துள்ளார். ஆனால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த நபரை துரத்திப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கும் போது பல அதிர்ச்சிகர விஷயங்கள் வெளியாகியுள்ளன.

பிடிபட்ட மர்ம நபர் ஒரு தொடர் பாலியல் வன்கொடுமைகளை நிகழ்த்தி வரும் ஆசாமி என்றும், கிட்டத்தட்ட ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 40 பெண்களை கற்பழித்துள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் இவரின் வெறி செயலுக்கு 10 வயது முதல் 80 வயதிற்குட்பட்ட அனைவரும் ஆளாகியுள்ளதும் வெளிவந்துள்ளது.

இவர் பெண்கள் இருக்கும் வீட்டின் வேலிகள் ஏறி சென்று அவர்களின் வீட்டுக்குள்ளேயே பாலியல் பலாத்காரம் செய்வதாக கேள்விப்பட்டதால், அவர்கள் கடந்த ஆண்டு தங்கள் சொந்த வீடுகளில் கூட பயத்துடன் வாழ்ந்ததாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்