Nadhi mobile
Maha Others

ஹனிமூன் சென்ற தம்பதி.. நீண்ட நேரமா திறக்காமல் இருந்த ஹோட்டல் அறை.. "உள்ள போய் பாத்ததும்.." வெலவெலத்து போன ஊழியர்..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

புதிதாக திருமணமான தம்பதி தேனிலவுக்கு சென்றிருந்த நிலையில், அங்கு நடந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஹனிமூன் சென்ற தம்பதி.. நீண்ட நேரமா திறக்காமல் இருந்த ஹோட்டல் அறை.. "உள்ள போய் பாத்ததும்.." வெலவெலத்து போன ஊழியர்..

Also Read | கேரளாவில் கண்டுபிடிக்கப்பட்ட அடுத்த வைரஸ்.. 300 பன்றிகளுக்கு நேர போகும் துயரம்??.. அதிர்ச்சி பின்னணி

அமெரிக்க மாகாணம், டென்னசியை அடுத்த Memphis என்னும் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்டி ஜியோன் சென் என்ற பெண்ணுக்கு, பிராட்லி ராபர்ட் டாவ்சன் என்பவருடன் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது.

இதில், டாவ்சன் ஐடி ஊழியராக பணிபுரிந்து வரும் நிலையில், சென் Pharmacist ஆக பணிபுரிந்து வந்துள்ளார்.

சென் மற்றும் டாவ்சன் திருமணம் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றிருந்த நிலையில், இருவரும் தங்களின் தேனிலவுக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு, பிஜி நாட்டில் உள்ள ட்ருட்லி என்னும் தீவுக்கு சென்றுள்ளனர்.  அங்குள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து இருவரும் தங்கி உள்ளனர். அப்படி ஒரு சூழ்நிலையில், இரண்டு தினங்கள் கழித்து, சென் மற்றும் டாவ்சன் ஆகியோர், காலை உணவை அருந்த வெளியே வரவில்லை என கூறப்படுகிறது.

newly wed couple went honeymoon room closed for more time

அவர்களின் அறைக்கு வெளியே, தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற குறிப்பு பலகையும் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, மதிய வேளையிலும் சென் மற்றும் டாவ்சன் ஆகியோர் உணவருந்த வெளியே வரவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றது. மதியத்திற்கு பிறகும் அறையின் கதவு திறக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், அந்த ஹோட்டலின் பணியாளர், தன்னிடம் இருந்த மாற்று சாவியை பயன்படுத்தி, கதவை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அங்கே டாவ்சனின் மனைவி சென் உடலில் காயங்கள் மற்றும் ரத்தங்களுடன் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ந்து போயுள்ளார். உடனடியாக, இதுகுறித்து போலீசாருக்கும் அந்த பணியாளர் தகவலை தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது, கணவரான பிராட்லி, அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தீவு ஒன்றிற்கு தப்பித்துச் சென்றதை கண்டறிந்தனர்.

newly wed couple went honeymoon room closed for more time

உடனடியாக, டாவ்சனை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இது தொடர்பாக நடந்த முதற்கட்ட விசாரணையில், ஹோட்டலில் சென் மற்றும் பிராட்லி அறை எடுத்து தங்கிய போது, அவருக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது தான், கோபத்தின் உச்சத்தில் இருந்த பிராட்லி, வாக்குவாதம் முற்றிய போது, ஹோட்டலின் கழிவறையில் வைத்து தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

பின்னர், அங்கிருந்து கயாக் துடுப்பு  படகு மூலம், அவர் தீவை விட்டு சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. தேனிலவுக்குச் சென்ற தம்பதிக்கு மத்தியில், சண்டை உருவாகி பெண் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Also Read | அதிகாலை நேரம்.. பொத்தென கேட்ட சத்தம்.. "காவலாளி ஓடி போய் பாத்தப்போ.." இணையத்தை அதிர வைத்த இளைஞரின் முடிவு

NEWLY WED COUPLE, HONEYMOON

மற்ற செய்திகள்