"யாரையுமே லவ் பண்ண மாட்டேங்குறான்".. முரட்டு சிங்கிள் மகனை மனநல மருத்துவரிடம் அழைத்துப் போன அம்மா.. விநோத பின்னணி..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தன்னுடைய மகன் யாரையுமே காதலிப்பதில்லை எனவும் அதனால் அவருக்கு திருமணம் நடைபெறுவது சிக்கலாக இருப்பதாக கூறி மகனை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார் தாய் ஒருவர்.

"யாரையுமே லவ் பண்ண மாட்டேங்குறான்".. முரட்டு சிங்கிள் மகனை மனநல மருத்துவரிடம் அழைத்துப் போன அம்மா.. விநோத பின்னணி..!

                             Images are subject to © copyright to their respective owners.

Also Read | சூப்பரான முயற்சி.. பாராட்டிய நடிகர் லியனார்டோ டிகாப்ரியோ.. இந்தியாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்த அசாம் முதல்வர்.. பின்னணி என்ன?

பொதுவாக படிப்பு முடிந்து ஒரு வேலையில் செட்டில் ஆனவுடன் பெரும்பாலும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கேட்கும் கேள்வி கல்யாணம் எப்போது? என்பதுதான். சொல்லப்போனால் இது மரபிலேயே ஊன்றி விட்ட ஒன்று. அந்த காலகட்டத்தில் சரியான வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தொடர்ந்து வற்புறுத்தலும் அதிகரிக்க ஆரம்பிக்கும். இந்தியாவில் மட்டுமல்ல சீனாவிலும் இப்படித்தான் போல. இதனை மெய்ப்பிக்கும் விதமாக தன்னுடைய மகனை மன நல மருத்துவர் ஒருவரிடம் அழைத்துச் சென்று இருக்கிறார் தாய். அதற்கு அவர் சொல்லிய காரணம் தான் பலரடையும் பலரையும் திகைப்படைய செய்திருக்கிறது.

மத்திய சீனாவை சேர்ந்தவர் வாங் (குடும்ப பெயர்). ஹெனான் மாகாணத்தில் வசித்து வரும் இவர் சமீபத்தில் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார். அது நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தி இருந்தது. அதாவது 38 வயதான வாங் யாரையுமே காதலிப்பதில்லை எனக் கூறி அவருடைய அம்மா மனநல மருத்துவரிடம் அவரை அழைத்துச் சென்று இருக்கிறார். ஹெனான் மாகாணத்தில் உள்ள மனநல மருத்துவமனைக்கு கடந்த பிப்ரவரி நான்காம் தேதி இருவரும் சென்றிருக்கின்றனர்.

Mother Takes Her Son To Psychiatrist for he did not married

Images are subject to © copyright to their respective owners.

அப்போது மருத்துவரிடமும் இது பற்றி அவருடைய தாய் கூறியுள்ளார். வாங்கை பரிசோதித்த மருத்துவர் அவர் நலமுடன் இருப்பதாகவும் அவருடைய தாய்க்கு தான் தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற அழுத்தம் அதிக அளவில் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து உள்ளூர் ஊடகத்திடம் பேசி இருக்கும் வாங் "நான் திருமணம் ஆகாத நபர் என அடையாளப்படுத்தப்பட விரும்பவில்லை. நான் என்னுடைய வாழ்க்கையில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறேன். எனக்கான நபரை நான் இன்னும் கண்டடையவில்லை. எனக்கு திருமணம் ஆகாததால் என்னுடைய அம்மா சரிவர உறங்குவதில்லை. இது எனக்கு கவலையை அளிக்கிறது" என தெரிவித்திருக்கிறார்.

Mother Takes Her Son To Psychiatrist for he did not married

Images are subject to © copyright to their respective owners.

ஹெனான் மாகாணத்தில் டென்னிஸ் பயிற்சியாளராக பணிபுரிந்து வரும் வாங் தன்னுடைய விவரங்களை சமூக வலைதளங்களில் பட்டியலிட்டு இருக்கிறார். மேலும் "என்னை யார் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள்?" என கேள்வி எழுப்பி இருக்கிறார். அவருடைய இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Also Read | எதே 2 காபி ரூ.3.6 லட்சமா?.. அதிர்ச்சியான தம்பதி.. அப்புறம் தான் உண்மையே தெரிஞ்சிருக்கு..!

MOTHER, SON, PSYCHIATRIST

மற்ற செய்திகள்