'கணவருடன் முதல் வருட திருமண நாளை கொண்டாட போறேன்'!.. 'காதலனிடம் கூறிவிட்டு போன பெண்'.. 'ஆச்சரிய சம்பவம்'!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரிட்டனில் காலையில் எழுந்த பெண் ஒருவர் தன்னுடன் வாழும் காதலரிடம் சொல்லிவிட்டு, கணவருடன் முதல் திருமண நாளை கொண்டாடச் செல்வதாக கூறிய சுவாரஸ்ய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

'கணவருடன் முதல் வருட திருமண நாளை கொண்டாட போறேன்'!.. 'காதலனிடம் கூறிவிட்டு போன பெண்'.. 'ஆச்சரிய சம்பவம்'!

யுகேவில் Merseyside என்கிற இடத்தில் Kate Cunningham என்கிற 38 வயது பெண்  Elder என்கிற மரத்தின் மீது கொண்ட அதீத பாசத்தின் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் அந்த மரத்தை திருமணம் செய்துகொண்டார்.

சரியாக ஓராண்டு முடிந்து திருமண நாள் வந்ததால், முதலாவது திருமண நாளை கொண்டாடும் விதமாக தனது கணவரான  Elder-ஐ சந்திப்பதற்காக Kate சென்றதும், இதற்கென Kate Elder என பெயரை மாற்றிக்கொண்டதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி பேசிய Kate, தனது மகனுக்கு மட்டும் இந்த திருமணம் வித்தியாசமாக தோன்றியதாகக் குறிப்பிட்டதுடன், Elder-ஐ விவாகரத்து செய்யும் எண்ணமே இல்லை என்றும் தெரிவிக்கிறார்.

மற்ற செய்திகள்