Video: “அட என்னமா நீ இப்படி பண்றியே மா!”.. சிரிப்பை அடக்கிக் கொண்டு ஆசீர்வாதம் செய்த பாதிரியார்.. குழந்தையின் ‘வைரல்’ வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சர்ச்சிற்கு சென்ற சிறுமி ஒருவரை பாதிரியார் ஒருவர் ஆசீர்வாதம் செய்ய முயன்றபோது சிறுமி செய்த காரியம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Video: “அட என்னமா நீ இப்படி பண்றியே மா!”.. சிரிப்பை அடக்கிக் கொண்டு ஆசீர்வாதம் செய்த பாதிரியார்.. குழந்தையின் ‘வைரல்’ வீடியோ!

முகத்த்தில் மாஸ்க் அணிந்தபடி சிறுமி ஒருவர் தேவாலய பாதிரியாரிடம் ஆசீர்வாதம் வாங்கச் செல்கிறார்.  ஆனால் அப்போது அந்த சிறுமி, பாதிரியாரின் ஆசீர்வாதத்தை, தன் கைகளை உயர்த்தி, ஹை-ஃபை செய்து மாற்றி கூடியிருந்த அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

இதனால் மனம் மகிழ்ந்த அந்த பாதிரியார் சிரிப்பு வந்தும், கட்டுப்படுத்தியபடி, குழந்தையை ஆசீர்வாதம் செய்கிறார். இதனிடையே குழந்தையின் அம்மா, அவளின் கையை கீழே இறக்கி விடுகிறார். ஆனால் குழந்தையின் இந்த துடிப்பான செயலும் எதார்த்தமும் பலராலும் பாராட்டுப் பட்டு வருகிறது.

 

இணையத்தில் பலரையும் கவர்ந்து வரும் இந்த வீடியோவை, இதுவரை சுமார்  20 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

 

மற்ற செய்திகள்