'ரொம்ப பயமா இருக்குங்க...' 'IT ஊழியர்கள் கூறும் காரணங்கள்...' - அதிர வைக்கும் சர்வே முடிவுகள்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

லிங்க்ட் இன் என்னும் ஆன்லைன் தொழில்முறை வலையமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வில், தகவல் தொழில்நுட்ப மற்றும் ஊடக துறையை சார்ந்த ஊழியர்கள் தங்கள் வேலைக்கு செல்ல பயமா இருப்பதாக தெரிவித்துள்ளனர். 

'ரொம்ப பயமா இருக்குங்க...' 'IT ஊழியர்கள் கூறும் காரணங்கள்...' - அதிர வைக்கும் சர்வே முடிவுகள்...!

லிங்க்ட் இன் வெளியிட்டுள்ள அறிக்கையில் நுகர்வோர் பொருட்கள் துறையில் இருக்கும் தொழில் வல்லுநர்களில் 39 சதவீத பேரும், பொழுதுபோக்கு மற்றும் பயணத்தை மேற்கொள்ளும் 46 சதவீத பேரும், தொழில் வல்லுநர்களும் அனுமதிக்கப்பட்டவுடன் பணிக்குத் திரும்புவார்கள் என குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியாவில் ஜூன்-1 முதல் ஜூலை-26 வரை சுமார் 5,553 நிபுணர்களிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி பெரும்பாலான ஊழியர்கள் தங்களின் பணியிடங்களுக்கு திரும்ப பயமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தைச் சேர்ந்த நூற்றில் 65% ஊழியர்களும், ஊடக துறையில் 61% மற்றும் போக்குவரத்து பணியாளர்களில் 61% பேரும் பணிக்கு செல்ல அச்சமாக இருப்பதாக லிங்க்ட் இன் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் சுமார் 25% பேர் தங்கள் பணியிடங்களில் சுகாதாரம் சார்ந்த பாதுகாப்பு இல்லாமல் இருப்பதால் தங்கள் அலுவலகங்களுக்குத் திரும்பிச் செல்வதைத் தவிர்ப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

"பல நகரங்களில் குறைந்த பண இருப்பு, SMB-க்களுக்கான வணிக வாழ்வாதாரம் ஒரு சவாலான விவகாரமாகத் தொடர்கிறது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்