முதன்முறையாக தாத்தாவின் 'பிறந்தநாள்' கொண்டாட்டத்தை... தவிர்த்த 'வடகொரிய' அதிபர்... கொரோனா காரணமா?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா அச்சம் காரணமாக மிகவும் ஆர்ப்பாட்டமாக நடைபெற்ற தாத்தாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வடகொரிய அதிபர் கிம் ஜான் உங் கலந்து கொள்ளவில்லை என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

முதன்முறையாக தாத்தாவின் 'பிறந்தநாள்' கொண்டாட்டத்தை... தவிர்த்த 'வடகொரிய' அதிபர்... கொரோனா காரணமா?

வடகொரியாவை நிறுவிய கிம் இல் சுங்கின் பிறந்த நாள் வடகொரியாவில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. சூரியனின் நாள் என்ற பெயரில் ஆண்டு தோறும் நடைபெறும் இந்த விழாவில் கொரிய அதிபர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொள்வது வழக்கம்.

ஆனால் நேற்று முன்தினம் நடைபெற்ற தனது தாத்தாவின் பிறந்தநாள் விழாவில் அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது. கடந்த 9 வருடங்களில் முதன்முறையாக பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதை கிம் ஜாங் உன் தவிர்த்து இருப்பதால், கொரோனா அச்சம் காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.