“மகள்களை விட்டுவிட்டு, வெளிநாட்டு வேலைக்கு போன மனைவி!”.. அதிர்ச்சி அடையவைத்த கணவரின் கொடூர செயல்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஐக்கிய அரபு அமீரகத்தில் தன் மனைவியை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“மகள்களை விட்டுவிட்டு, வெளிநாட்டு வேலைக்கு போன மனைவி!”.. அதிர்ச்சி அடையவைத்த கணவரின் கொடூர செயல்!

கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் நாயர், இவருக்கு வித்யா சந்திரன் என்கிற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். குடும்ப சூழ்நிலை காரணமாக வித்யா சந்திரன் துபாய்க்கு வேலைக்காக சென்றார். இவருடைய மகள்கள் 2 பேரும் கேரளாவில் உள்ளனர். தனது அம்மா ஓணம் பண்டிகைக்காக மீண்டும் வருவார் என்று மகள்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், வித்யா சந்திரன் வேலை பார்க்கும் இடத்துக்கு சென்ற சந்திரசேகரன் நாயர், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.

பின்னர் சில மணிநேரங்களிலேயே போலீஸாரிடத்தில் பிடிபட்ட அவர், துபாய் நீதிமன்றத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது, மனைவியை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், தன்னுடைய மனைவி வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகித்ததால், கொலை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்