ஆணவக்கொலையின் உச்சம்! - "பெத்த மகள, ஓட ஓட விரட்டி... குத்தி 'கொலை' செஞ்சு... பிணத்துக்கு பக்கத்துலயே 'டீ, தம் அடித்த' தந்தை!"

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மகளை ஓட ஓட விரட்டி கொடூர கொலை செய்து விட்டு உடல் அருகே டீ குடித்த படி சிகரெட் புகைத்துக் கொண்டிருந்த தந்தையை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆணவக்கொலையின் உச்சம்! - "பெத்த மகள, ஓட ஓட விரட்டி... குத்தி 'கொலை' செஞ்சு... பிணத்துக்கு பக்கத்துலயே 'டீ, தம் அடித்த' தந்தை!"

ஜோர்டானில் பல ஆண்டுகளாக சகோதரர்கள் மற்றும் தந்தையால் துஷ்பிரயோகத்திற்கு இலக்காகி வந்த 30 வயது அஹ்லம் என்ற பெண்ணை அவரது  தந்தை கொலை செய்ய விரட்டி உள்ளார்.

குடியிருப்பில் இருந்து 'யாராவது காப்பாற்றுங்கள்' என அலறியபடி தெருவுக்கு ஓடி வந்த அந்த பெண்ணை துரத்தி வந்த தந்தை சிமெண்ட் கட்டையால் தலையில் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் நிலைகுலைந்து தரையில் சரிந்த அஹ்லம், இறக்கும் வரை அந்த நபரால் தாக்குதலுக்கு உள்ளாகியதாக கூறப்படுகிறது.

மரண பயத்தில் அஹ்லம் அலறியதைக் கேட்டு தெருவில் கூடிய பொதுமக்கள் முன்னிலையில் இந்த கொடூர தாக்குதல் நடந்துள்ளது. அஹ்லம் அவரது தாயாரிடம், கெஞ்சியும் அந்த தாயார் சிலையாக நின்றிருந்தார் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்,

மகளின் சடலத்தின் அருகே டீ குடித்த படி சிகரெட் புகைத்துக் கொண்டிருந்த தந்தையை கண்டு அதிர்ந்துள்ளனர். அஹ்லம் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஜோர்டான் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது ஆணவக்கொலை எனவும், அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் பலர் சமூக ஊடகங்களில் கடுமையாக வாதிட்டு வருகின்றனர்.

 

மற்ற செய்திகள்