அடிச்சு நொறுக்குனதும் இல்லாம.. ஐபிஎல் வரலாற்றில் இப்படி ஒரு சாதனை!.. பாராட்டு மழையில் கேப்டன்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

துபாயில் நடந்துவரும் ஐபிஎல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இன்றைய 35வது ஆட்டத்தில் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் டேவிட் வார்னர் தலைமையிலான ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் மோதிக்கொண்டன.

அடிச்சு நொறுக்குனதும் இல்லாம.. ஐபிஎல் வரலாற்றில் இப்படி ஒரு சாதனை!.. பாராட்டு மழையில் கேப்டன்!

முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்ய,  கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 20 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்தது. பின்னர் 164 என்கிற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடியதில், 20 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து போட்டியை சமன் செய்ய, பின்னர் சூப்பர் ஓவரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வென்றது.

எனினும், இறுதி வரை போராடிய ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் 5 பவுண்டரிகளுடன் 47 (33) ரன்கள் எடுத்ததுடன், ஒரு பெரிய சாதனையும் படைத்துள்ளார். ஆம், இந்த போட்டியில் 5 ஆயிரம் ரன்களை கடந்து, ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை 135 போட்டிகளில் விளையாடி பெற்றுள்ளார்.

வார்னருக்கு முன் விராட் கோலி (5,759), ரெய்னா (5,368) மற்றும் ரோகித் சர்மா (5,149) ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்