'கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய அடுத்த நாடு!'.. கிடுகிடுவென உயர்ந்த பலி எண்ணிக்கை!.. 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரஸின் கோரத்தாண்டவத்தினால் பாதிக்கப்பட்டு 15,000த்திற்கும் அதிகமானோர் பலியான நாடுகளில் 4வதாக பிரான்ஸ் இணைந்துள்ளது. இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பெரிதும் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடாக பிரான்ஸ் விளங்குகிறது.

'கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய அடுத்த நாடு!'.. கிடுகிடுவென உயர்ந்த பலி எண்ணிக்கை!.. 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு!

ஆனால் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்கள் எண்ணிக்கை 24 மணி நேரத்தில் 6821-லிருந்து 6730 ஆகக் குறைந்துள்ளது. திங்களன்று லாக்-டவுனை அதிபர் எமானுயெல் மேக்ரான் மே 11 வரை நீட்டித்தார்.

பிரான்ஸ் மருத்துவமனைகளில் மரணங்கள் 5% அதிகரித்து 15,729 ஆக கூடியுள்ளது என்று பொதுச்சுகாதார அதிகாரி ஜெரோம் சாலமன் தெரிவித்துள்ளார்.

அதே போல் உறுதி செய்யப்பட்ட கொரோனா தொற்று எண்ணிக்கை 5.3% அதிகரித்து மொத்தம் 103, 573 ஆக உள்ளது. அதாவது ஞாயிற்றுக்கிழமை அன்று 1.7%, திங்களன்று 2.8% அதிகரிப்பு என்பதிலிருந்து 5.3% ஆக அதிகரித்துள்ளது.

பல்வேறு கணக்கீடுகளிலிருந்து பார்த்தால் பிரான்ஸ் மக்கள் தொகையில் 5-10% மக்களுக்கு கொரோனா பாதிப்பு தொற்றியிருக்கலாம் என்று அச்சப்படுவதாக ஜெரோம் சாலமன் தெரிவித்துள்ளார்.