'அடேங்கப்பா அதிர்ஷ்டம்னா இப்படில இருக்கணும்'... ரோட்டில் கையேந்தி நின்றவர்களுக்கு அடித்த ஜாக்பாட்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

திடீரென ஒருவருக்குக் கிடைக்கும் வாய்ப்பு என்பது யாராலும் யூகிக்க முடியாத ஒன்று. அந்த வகையில் சாலையில் கையேந்தி நின்றவர்களுக்கு அடித்த ஜாக்பாட் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

'அடேங்கப்பா அதிர்ஷ்டம்னா இப்படில இருக்கணும்'... ரோட்டில் கையேந்தி நின்றவர்களுக்கு அடித்த ஜாக்பாட்!

பிரான்சு நாட்டின் கடலோர நகரமான பிரெஸ்டில் அமைந்துள்ள கடை ஒன்றின் வெளியே நான்கு பேர் நின்று கொண்டு தர்மம் கேட்டுக் கொண்டு இருந்துள்ளார்கள். அவர்களுக்குத் தங்க வீடு எதுவும் இல்லை எனவும் சாப்பாட்டிற்கே கஷ்டப்படுவதாகவும் அங்கு வருபவர்களிடம் கூறிக்கொண்டு நின்றுள்ளார்கள். அந்த நேரம் பார்த்து அங்கு வந்த பெண் ஒருவர், அவர்களுக்குப் பணம் எதுவும் கொடுக்காமல், தான் வாங்கி வைத்திருந்த ஒரு யூரோ மதிப்பிலான லாட்டரி சீட்டு ஒன்றை தானம் கேட்டவர்களிடம் கொடுத்துள்ளார்.

ஆனால் அந்த லாட்டரிக்கு இப்படி ஒரு ஜாக்பாட் அடிக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். அந்த பெண் தனமாக வழங்கிய லாட்டரி சீட்டிற்கு 50,000 யூரோ பரிசாக விழுந்துள்ளது. இதை அறிந்த அந்த 4 பேரும் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டார்கள். தங்க வீடு இல்லாமல் கஷ்டப்பட்டவர்களின் வாழ்வு ஒரே நாளில் தலைகீழாக மாறிவிட்டது. அந்த நான்கு பேரும் பரிசுத் தொகையான 50,000 யூரோவையும் சரிபாதியாகப் பிரித்துக் கொள்ள முடிவு செய்துள்ளார்கள்.

ஆளுக்குச் சரிபாதியாகப் பிரிக்கும் போது ஒருவருக்கு 12,500 யூரோக்கள் வரும். ஆனால் அந்த பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்றே எங்களுக்குத் தெரியவில்லை என அந்த 4 பேரும் தெரிவித்துள்ளார்கள்.

மற்ற செய்திகள்