விமானத்துக்குள்ள ஆவி இருக்கா? யாருங்க என்கிட்ட 'க்ரீன் டீ' கேட்டது? மண்டையை பிச்சிக்கும் விமானப் பணிப்பெண்

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இறந்து போன தன் கணவருக்கு விமானத்தில் க்ரீன் டீ கொடுக்க மனைவி சொன்னதாக விமான பணிப்பெண் கூறிய சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

விமானத்துக்குள்ள ஆவி இருக்கா? யாருங்க என்கிட்ட 'க்ரீன் டீ' கேட்டது? மண்டையை பிச்சிக்கும் விமானப் பணிப்பெண்

அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்.. பட்டு சேலை அணிந்து பரிமாறும் ரோபோ.. வியக்கும் வாடிக்கையாளர்கள்

கொரோனா பரவ தொடங்கியதுமுதல் வீட்டுக்குள் முடங்கிய பலர் டைம் பாஸ் செய்வதற்காக அதிக நேரங்களில் சமூக வலைத்தளங்களில் நேரம் செலவிடுவது உண்டு. அதோடு, யூடியூப் போன்ற தளங்கள் மூலம் பலர் தங்கள் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள், வெளியூர் பயணங்கள், வாழ்க்கை குறிப்புக்கள், சமையல் என அனைத்து அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.

விமானத்தில் பணிப்பெண்:

அந்த வகையில், எமிரேட்ஸ் ஏர்லைன்சில் விமானத்தில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த 38 வயதான சாண்ட்ரா க்வோன் என்ற பெண்மணியும், தன் வாழ்க்கையில் சந்தித்த ஒரு விசித்திர அனுபவங்களை வீடியோக்களாக பதிவிட்டு  வந்துள்ளார். அதில் ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அந்த வீடியோவில் சாண்ட்ரா க்வோன் குறிப்பிட்டுள்ளதாவது, 'நான் எமிரேட்ஸ் ஏர்லைன்சில் பணியாற்றி வந்த போது, ஒருமுறை ஒரு பெண் பயணியிடம் சென்று உங்களுக்கு ஏதாவது குடிக்க வேண்டுமா எனக் கேட்டேன்.

கிரீன் டீ கொண்டு வாருங்கள்:

Flight attendant says GHOST of a passenger's wife

ஆனால், அந்த பெண் எனக்கு தற்போது எதுவும் குடிக்க வேண்டாம். ஆனால், பக்கத்தில் இருக்கும் என் கணவர் கடந்த ஒரு வாரமாக கடினமான சூழ்நிலையை சந்தித்து வருகிறார். அவருக்கு மட்டும் ஒரு க்ரீன் டீ கொடுங்கள். அவர் தற்போது, உடல் சோர்வால் நன்றாக உறங்கி கொண்டு இருக்கிறார். எனவே, அவர் எழுந்தவுடன் அவருக்கு கிரீன் டீ கொண்டு வாருங்கள். அதிலும், டீயில் பாலும் சர்க்கரையும் சேர்ந்து இருந்தால்தான் ரொம்ப பிடிக்கும் எனத் தெரிவித்திருந்தார்.

நானும், அந்த பெண் பயணியின் கணவர் எழுந்தவுடன் அவருடைய மனைவி சொன்னப்படி, கிரீன் டீயை கொடுக்க சென்றேன். அப்போது, உங்கள் மனைவி உங்களுக்கு கிரீன் டீ கொடுக்கச் சொன்னார் என அந்த கிரீன் டீயை கொடுத்த போது அவர் மிரண்டுப்போய் என்னையே பார்த்து கொண்டிருந்தார்.

அதிர்ந்து போன பணிப்பெண்:

அதோடு அந்த நபர் அதிர்ச்சியாக இருக்கையை விட்டு எழுந்து என் மனைவி சொன்னாளா என கேட்டார். நானும் ஒன்றும் புரியாதவாறு ஆம் என்று தலையாட்டினேன். அதன் பிறகு அந்த பெண்ணின் கணவர் சொன்ன விஷயம் தான் எனக்கு அதிர்ச்சி அளித்தது. அவர் தன் மனைவி இறந்து ஒரு வாரம் ஆகிவிட்டது எனவும், அவளின் உடல் கூட சொந்த நாட்டிற்கு எடுத்து செல்ல இந்த விமானத்தில் சரக்குகள் வைக்கும் இடத்தில்தான் வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். இதை கேட்ட எனக்கு குழப்பத்தில் மயக்கமே வந்துவிட்டது' என பகிர்ந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்தான இந்த வீடியோவை தனது யூட்யூப் பக்கத்தில் சாண்ட்ரா பதிவிட, இதைபார்த்து அவரது பாலோவர்ஸ்கள் புல்லரித்து விட்டதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

தமிழ்நாட்டுல இல்லாத குக்கரா துபாயில விக்குது? டவுட் ஆன அதிகாரிகள்.. பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி

FLIGHT ATTENDANT, GHOST, PASSENGER, மனைவி, க்ரீன் டீ, விமானப் பணிப்பெண்

மற்ற செய்திகள்