'30 வருஷமா பிச்சை எடுக்குறாங்க...' 'ரூ. 1.5 கோடி பேங்க் பேலன்ஸ், 5 மாடி வீடு...' எப்படி இது சாத்தியம்...? - விசாரணையில் தெரிய வந்த வியக்க வைக்கும் ஆச்சரியம்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

எகிப்து நாட்டை சேர்ந்த நபிஷா(57) என்பவர் கடந்த 30 வருடமாக பிச்சை எடுத்து வந்துள்ளார்.

'30 வருஷமா பிச்சை எடுக்குறாங்க...' 'ரூ. 1.5 கோடி பேங்க் பேலன்ஸ், 5 மாடி வீடு...' எப்படி இது சாத்தியம்...? - விசாரணையில் தெரிய வந்த வியக்க வைக்கும் ஆச்சரியம்...!

தனது 27-வது வயதில் கணவரை பிரிந்த நிலையில், பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தியுள்ளார் நபிஷா. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நபீஷாவின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் வந்ததால் அவரை கைது செய்து விசாரித்துள்ளனர்.

விசாரணையில் இப்படியுமா என ஆச்சரியப்படும் அளவிற்கு நபீஷாவின் கதை வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணவனால் கை விடப்பட்ட பின்னர் 30 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வைத்துள்ள பணத்தை வங்கியில் போட்டு வைத்துள்ளார். அந்த பணத்தின் மதிப்பு ரூ 1.5 கோடி. மேலும் 5 மாடி வீடு வைத்துள்ளார். அதனை வாடகைக்கும் விட்டு சம்பாதித்தும் வருகின்றார். ஆனாலும் தெருவில் பிச்சை எடுப்பதை மட்டும் அவர் கைவிடவே இல்ல.

நபிஷா கடந்த 10 வருடங்களாக வீல்சேரில் அமர்ந்து தான் பிச்சை எடுத்து வந்துள்ளார். ஆனால் அவரது கால்கள் நல்ல நிலையில் உள்ளது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. வீல்சேரில் அமர்ந்து பிச்சையெடுத்தால் நல்ல வருமானம் வருவதாகவும்,

ஒரு முறை காலில் ஏற்பட்ட காயத்தால் வீல்சேர் பயன்படுத்தி வந்ததும், அந்த சமயம் பணம் அதிகமாக கிடைத்ததால் அப்படியே பிச்சை எடுப்பதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்