'ஒரு பிளேட் பிரியாணி எவ்ளோ'?.. 'ரூ.20,000 ஒன்லி'!.. என்னணே சொல்றீங்க?.. அப்படி அதுல என்ன ஸ்பெஷல்?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஒரு பிளேட் பிரியாணி ரூ.20,000க்கு விற்பனை செய்யப்படுவதால், அப்படி அந்த பிரியாணியில் என்ன ஸ்பெஷல் என்று வாடிக்கையாளர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.

'ஒரு பிளேட் பிரியாணி எவ்ளோ'?.. 'ரூ.20,000 ஒன்லி'!.. என்னணே சொல்றீங்க?.. அப்படி அதுல என்ன ஸ்பெஷல்?

இந்தியா போலவே வளைகுடா நாடுகளிலும் பிரியாணியும் விரும்பி உண்ணப்படுகிறது. குறிப்பாக, துபாயில் விதவிதமாக பிரியாணி தயாரித்து சாப்பிடுகிறார்கள். ஏராளமான பிரியாணி ரெஸ்டாரன்டுகளும் துபாய் முழுவதும் நிறைந்துள்ளன.

இந்திய தயாரிப்பு பிரியாணியும் துபாயில் விரும்பி உண்ணப்படுகிறது. அந்த வகையில், துபாயில் செயல்பட்டு வரும் பாம்பே போரோ என்ற பிரியாணி ரெஸ்டாரன்ட்டில் ராயல் பிரியாணி என்ற பெயரில் உலகிலேயே அதிக விலை கொண்ட பிரியாணி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பிரியாணியில் 23 கேரட் சாப்பிடக் கூடிய தங்கமும் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு பிளேட்  அலங்கரிக்கப்பட்ட  பிரியாணியின் விலை ரூ.20,000 ஆகும். கிட்டத்தட்ட 6 பேர் ஒரு பிளேட் பிரியாணியை உண்ண முடியும்.

பாம்பே போரோ ரெஸ்டாரன்ட் துபாயில் தொடங்கப்பட்டு முதல் ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு இந்த ராயல் பிரியாணி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிரியாணியுடன் காஷ்மீர் ஆட்டு கபாப், பழைய டெல்லி ஆட்டுக்கறி, ராஜ்புத் சிக்கன் கபாப், மொகாலி கோப்தாஸ், மற்றும் மலாய் சிக்கன் ஆகியவையும் வழங்கப்படும்.

பிரியாணியில் சாப்பிடக் கூடிய தங்கம் அலங்கரிக்கப்பட்டிருக்கும். வெறும், 45 நிமிடங்ளில் இந்த பிரியாணியை தயாரித்து வழங்குகிறார்கள்.

 

மற்ற செய்திகள்