Darbar USA

‘டிராவல் பேக் ரொம்ப பெருசா இருக்கு’!.. ‘பலே திட்டம் போட்ட தம்பதி’.. திறந்து பார்த்து மிரண்டுபோன அதிகாரிகள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மொராக்கோவிலிருந்து ட்ராலி பேக்குக்குள் வைத்து சிறுவனை அழைத்துச் செல்ல முயன்ற தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

‘டிராவல் பேக் ரொம்ப பெருசா இருக்கு’!.. ‘பலே திட்டம் போட்ட தம்பதி’.. திறந்து பார்த்து மிரண்டுபோன அதிகாரிகள்..!

மொராக்கோ நாட்டை சேர்ந்த தம்பதி கடந்த வாரம் ஆப்பிரிக்காவின் வடமேற்கில் உள்ள மெலாலா நகரத்துக்கு 10 வயது சிறுவனை அழைத்து செல்ல முயன்றுள்ளனர். அதற்காக காய்கறி, பழங்கள் அடங்கிய ட்ராலி பேக் ஒன்றை பயன்படுத்தியுள்ளனர்.

அந்த ட்ராலிக்குள் சிறுவனை அமர வைத்து மேலே காய்கறிகள், பழங்களால் நிரப்பி மூடியுள்ளனர். பின்னர் மெல்லாவில் உள்ள பெனி-என்சார் எல்லைக்கோட்டுக்கு அருகே சென்றுள்ளனர். அப்போது அவர்கள் தள்ளிக்கொண்டு வந்த ட்ராலி இயல்புக்கு மாறாக இருப்பதைக் கண்டு சந்தேகமடைந்த அதிகாரிகள், அதனை சோதனையிட்டுள்ளனர்.

அப்போது டிராலிக்குள் சிறுவன் மறைந்திருப்பதை கண்டுபிடித்தனர். இதனை அடுத்து அந்த தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அருகில் உள்ள முகாமில் வசித்து வரும் தாயிடமே சிறுவனை அனுப்பி வைத்துள்ளனர்.

POLICE, SPAIN, SHOPPING, TROLLEY, MOROCCAN