'ஜாகிங் போகும்போது'.. 'குறுக்கிட்ட கரடி!'.. 'ஷாக்' ஆகி நின்ற இளம்பெண்!.. அதுக்கு அப்புறம் 'கரடி செய்த' வைரல் காரியம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஜாகிங் போய்க் கொண்டிருந்த இளம் பெண்ணொருவரை கரடி ஒன்று தட்டிக் கொடுப்பது போல் தோன்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

'ஜாகிங் போகும்போது'.. 'குறுக்கிட்ட கரடி!'.. 'ஷாக்' ஆகி நின்ற இளம்பெண்!.. அதுக்கு அப்புறம் 'கரடி செய்த' வைரல் காரியம்!

என்பவர் வழக்கம்போல் மலையேற்றத்துக்கு சென்றபோது ஓட்டப் பயிற்சி மேற் கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் அவருக்கு எதிரே வந்துள்ளார். திடீரென அந்த பாதையில் கரடி ஒன்று குறுக்கிட அப்பெண் திடுக்கிட்டு போய் அப்படியே நின்றுள்ளார்.  அந்த கரடி அந்த இளம் பெண்ணை நெருங்க, அப்பெண் அப்படியே பயத்தில் உறைந்து நின்றிருந்துள்ளார்.

இந்த சம்பவத்தை இந்தப் பக்கம் இருந்த அந்த நபர் பயத்துடன் வீடியோ எடுத்துக் கொண்டிருந்துள்ளார். மேலும் அந்த கரடி அந்தப் பெண்ணிடம் நெருங்கி, தன் காலால் அந்த பெண்ணை ஒரு தட்டு தட்டிவிட்டு பின்வாங்குவதையும் எதிரில் நின்றவர் படம் பிடித்துள்ளார்.

 

அதன் பின்னர் அந்த கரடி, அவர் நிற்பதைக் கண்டும் கண்டு கொள்ளாதது போல் தெனாவட்டாக ஒரு நடை போட, அதுதான் சாக்கென்று ஆளை விட்டால் போதுமடா சாமி என்று அந்த இளம்பெண் அங்கிருந்து தப்பி ஓடுகிறார். இந்த தகவலை வனத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்க கரடியை பிடிக்க வனத்துறை அதிகாரி அலுவலர்கள் வனப்பகுதிக்கு விரைந்தனர்.

 

மற்ற செய்திகள்