'நான் நல்ல வாழ்க்கையை வாழ்ந்துட்டேன்'... 'எனக்கு வேணாம் அவங்களுக்கு கொடுங்க'... 'மரணத்திற்கு' முன் 'மூதாட்டி' செய்த 'கலங்கவைக்கும்' காரியம்...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனாவால் பாதிக்கப்பட்டு  தனக்கு வழங்கப்பட்ட வெண்டிலேட்டரை ஏற்க மறுத்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

'நான் நல்ல வாழ்க்கையை வாழ்ந்துட்டேன்'... 'எனக்கு வேணாம் அவங்களுக்கு கொடுங்க'... 'மரணத்திற்கு' முன் 'மூதாட்டி' செய்த 'கலங்கவைக்கும்' காரியம்...

பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த சுசேன் ஹோய்லேர்ட்ஸ் என்ற 90 வயது மூதாட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 20ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெல்ஜியத்தில் வெண்டிலேட்டருக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், மருத்துவமனையில் தனக்கு வழங்கப்பட்ட வெண்டிலேட்டரை அவர் வேண்டாம் என மறுத்துள்ளார்.

மேலும் அவர், "நான் நல்ல ஒரு வாழ்க்கையை வாழ்ந்துவிட்டேன். இந்த வெண்டிலேட்டரை இளைய நோயாளிகளுக்கு வழங்குங்கள்" என மருத்துவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். தன் உயிர் குறித்த கவலையின்றி வெண்டிலேட்டரை தியாகம் செய்த அந்த மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 நாட்களில் உயிரிழந்துள்ளார்.

CORONAVIRUS, BELGIUM, VENTILATOR, WOMAN