‘இதுக்கு ஒரு எண்ட்டே கிடையாதா’!.. சீனாவில் ‘மீண்டும்’ வேலையை காட்டிய கொரோனா.. தலைநகரில் அவசரநிலை பிரகடனம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் மீண்டும் கொரோனா தொற்று பரவியதால் அங்கு அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

‘இதுக்கு ஒரு எண்ட்டே கிடையாதா’!.. சீனாவில் ‘மீண்டும்’ வேலையை காட்டிய கொரோனா.. தலைநகரில் அவசரநிலை பிரகடனம்..!

சீனாவின் வூகான் நகரில் முதன்முதலில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. படிப்படியாக உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 80 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதன் தாக்கம் இன்னும் முழுமையாக நீங்காத நிலையில், தற்போது இங்கிலாந்தில் கொரோனாவின் புதிய வகை தொற்று பரவ ஆரம்பித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Beijing goes into emergency mode after new Corona cases recorded

இந்நிலையில் சீன தலைநகர் பெய்ஜிங்கில் மீண்டும் கொரோனா தொற்று மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. பெய்ஜிங் நகரில் 13 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து பெய்ஜிங் நகரில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க அவசர நிலை பிரகடனத்தை சீனா பிறப்பித்துள்ளது.

Beijing goes into emergency mode after new Corona cases recorded

விடுமுறை காலம் என்பதால் கொரோனா தொற்று பரவலை தடுக்க சீனா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் அரசு அதிகாரிகளுக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்கு விடுமுறை அளிக்கப்படாது என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மற்ற செய்திகள்