“ரஷ்ய மக்களை நான் மிகவும் நேசிக்கிறேன்.. அதனால்தான் இந்த உண்மையை சொல்றேன்”.. அர்னால்டு வெளியிட்ட பரபரப்பு வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் அதிபர் புதினுக்கு ஹாலிவுட் நடிகர் அர்னால்டு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

“ரஷ்ய மக்களை நான் மிகவும் நேசிக்கிறேன்.. அதனால்தான் இந்த உண்மையை சொல்றேன்”.. அர்னால்டு வெளியிட்ட பரபரப்பு வீடியோ..!

உக்ரைன் மீது 2 வாரங்களுக்கும் மேலாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இரு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதனிடையில் போர் நிறுத்தம் தொடர்பாக இருநாட்டு பிரதிநிதிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஹாலிவுட் நடிகரும், முன்னாள் கலிபோர்னியா கவர்னருமான அர்னால்டு ரஷ்ய அதிபர் புதினுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து வீடியோ வெளியிட்ட அவர், ‘ரஷ்ய மக்களை நான் மிகவும் நேசிக்கிறேன். அதனால்தான் இந்த உண்மையை சொல்கிறேன். இன்று நான் பேசுவதற்கு காரணம், தற்போது உலகில் நடந்து கொண்டிருக்கும், உங்களிடம் இருந்து மறைக்கப்பட்டு கொண்டிருக்கும் உண்மை குறித்து பேசுவதற்குதான்.

உக்ரைனில் நடக்கும் போர் குறித்த உண்மைகளை சொல்ல என்னை நீங்கள் அனுமதிப்பீர்கள் என நான் நம்புகிறேன். இந்தப் போர் உண்மையில் அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இது மக்களுக்கான போர் கிடையாது. இந்த போரால் பல நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக திரும்பியுள்ளது’ என அர்னால்டு கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘இந்த வீடியோவை பார்க்கும் ரஷ்ய வீரர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். நீங்கள் இப்போது செய்யும் போர் சட்டத்திற்கு புறம்பான முறையற்ற போர். உலகமே எதிர்க்கும் இந்த அர்த்தமற்ற போரில் உங்களது உடல், உயிர் அனைத்தையும் வீணடிக்கிறீர்கள்’ என அர்னால்டு கூறியுள்ளார்.

இதனை அடுத்து ரஷ்ய அதிபர் புதினுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், ‘இது நீங்கள் தொடங்கிய போர், நீங்கள் நினைத்தால் இதை நிறுத்தவும் முடியும்’ என கூறிய அர்னால்டு, போருக்கு எதிராக போராடி வரும் ரஷ்ய மக்களை பாராட்டி பேசியுள்ளார். அதில், ‘இந்த உலகமே உங்கள் வீரத்தை பார்த்துக்கொண்டிருக்கிறது. நீங்கள் தான் என் நிஜ ஹீரோக்கள்’ என அர்னால்டு கூறியுள்ளார்.

ARNOLD, RUSSIAUKRAINEWAR

மற்ற செய்திகள்