பத்தி எரியும் எலான் மஸ்க் - ட்விட்டர் விவகாரம்.. கூலாக ஆனந்த் மஹிந்திரா போட்ட ட்வீட்.. "நெத்தியடி பதில்'னா இதுதான் போல.."

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கடந்த சில தினங்களாகவே, இணையம் முழுக்க ஆக்கிரமித்திருந்தது, ட்விட்டர் மற்றும் எலான் மஸ்க் தொடர்பான செய்திகள் தான்.

பத்தி எரியும் எலான் மஸ்க் - ட்விட்டர் விவகாரம்.. கூலாக ஆனந்த் மஹிந்திரா போட்ட ட்வீட்.. "நெத்தியடி பதில்'னா இதுதான் போல.."

Also Read | பூட்டிக் கிடந்த வீடு.. "கதவ ஒடச்சிட்டு உள்ள போய் பாத்ததுல.." நடுங்கிய கிராமம்.. "உள்ள இதோட 'Smell' வேற வந்துருக்கு.."

உலகின் நம்பர் 1 கோடீஸ்வரர் மற்றும் தொழிலதிபரான எலான் மஸ்க், எப்போதும் ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கக் கூடியவர். தன்னுடைய பக்கத்தில், தொழில் செய்வது பற்றிய Business டிப்ஸ்கள், மீம்ஸ்கள், ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு வேடிக்கையான மற்றும் ஆக்கப் பூர்வமான பதில்கள் என அவரின் டைம்லைன் எப்போதுமே அற்புதமான விஷயங்களால் நிறைந்து இருக்கும்.

இதனிடையே, சமூக வலைத்தளமான ட்விட்டரை 44 மில்லியன் டாலர்களுக்கு வாங்குவதாக ஒப்பந்தம் ஒன்றை எலான் மஸ்க் போட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

 anand mahindra tweets about elon musk vs twitter deal

ஆனால், இந்த ஒப்பந்தத்தை எலான் மஸ்க் ரத்து செய்ததாக கூறப்படும் நிலையில், தங்களின் ஒப்பந்தத்தை மீறியதன் பெயரில், எலான் மஸ்க் மீது வழக்கு போட போவதாகவும் ட்விட்டர் நிறுவனம் முடிவு செய்திருந்தாக சொல்லப்படுகிறது. ஆனால், பதிலுக்கு இது தொடர்பான மீம்ஸ்களை தான் தனது ட்விட்டர்  பக்கத்தில் பகிர்ந்து வந்தார் எலான் மஸ்க்.

இது பற்றிய செய்திகள் அடிக்கடி இணையம் முழுவதும் வைரலாகி வந்த நிலையில், இந்தியாவின் முன்னணி தொழில் அதிபரான ஆனந்த் மஹிந்திரா, ட்விட்டர் - எலான் மஸ்க் விவகாரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார்.

 anand mahindra tweets about elon musk vs twitter deal

மஹிந்திரா நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திராவும், ட்விட்டரில் அதிக நேரத்தை ஆக்கப் பூர்வமாக செலவிடக் கூடியவர் தான். திறமையான நபர்களின் செயலை அங்கீகரிப்பது, நெட்டிசன்கள் சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதில் சொல்வது என எப்போதும் பாசிட்டிவ் Vibe-ல் தான் ஆனந்த் மஹிந்திராவின் ட்விட்டர் டைம் லைன் இருக்கும்.

 anand mahindra tweets about elon musk vs twitter deal

அந்த வகையில், தற்போது ட்விட்டர் மற்றும் எலான் மஸ்க் விவகாரம் குறித்து, ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த ட்வீட்டில், "எவ்வளவு நேரம், சக்தி மற்றும் பணம் வீணாகிறது. ட்விட்டர் என்பது செய்தி மற்றும் இணைப்புக்கான இன்றியமையாத ஆதாரமாகும். இது ஒரு சமூக நிறுவனமாக - பட்டியலிடப்பட்ட, லாபத்திற்காக- ஆனால் வலுவான அதிகாரம் மற்றும் பொறுப்புடன் செயல்படும் இயக்குநர்களைக் கொண்ட ஒரு குழுவால் நிர்வகிக்க முடியுமா?" என கேள்வி எழுப்பி உள்ளார்.

ட்விட்டர் மற்றும் எலான் மஸ்க் விவகாரம் குறித்து, ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில் தெரிவித்துள்ள கருத்து, இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

Also Read | ரட்சகன் ஹீரோயினுடன லலித் மோடி 'Dating' -ஆ.? ஒரே ஒரு பதிவால் பரபரப்பான சோசியல் மீடியா.!

ANAND MAHINDRA, ELON MUSK, TWITTER DEAL

மற்ற செய்திகள்