"அமெரிக்கா போனாலும் மாற மாட்டாங்க போல" - சக இந்தியரை 'சாதி' ரீதியாக துன்புறுத்திய இருவர் மீது வழக்கு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியில் அமைந்துள்ள சிஸ்கோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தில் ஜாதி அடிப்படையில் ஊழியர் ஒருவர் மீது பாகுபாடு காட்டி துன்புறுத்தியதாக மேலாளர்கள் இருவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

"அமெரிக்கா போனாலும் மாற மாட்டாங்க போல" - சக இந்தியரை 'சாதி' ரீதியாக துன்புறுத்திய இருவர் மீது வழக்கு!

இந்தியாவை சேர்ந்த அந்த பாதிக்கப்பட்ட நபர் பட்டியலின பிரிவைச் சேர்ந்தவராவர். கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் கலிபோர்னியாவில் அமைந்துள்ள சிஸ்கோ தலைமையகத்தில் முதன்மை பொறியாளராக பணியாற்றி வருகிறார். அதே நிறுவனத்தில் பொறியியல் மேலாளராக இந்தியாவை சேர்ந்த இரண்டு பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் தொடர்ந்து சாதி ரீதியாக அந்த பட்டியலினத்தை சேர்ந்த ஊழியரை மனரீதியாக துன்புறுத்தி, அவருக்கு கிடைக்க வேண்டிய சம்பள மற்றும் பதவி உயர்வு கிடைக்காமல் செய்து வந்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக, இருவர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிஸ்கோ நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், 'சட்டத்தின் படி பணியிடங்களில் அனைவரும் சரிசமமாக நடத்தப்பட வேண்டும். இந்த சம்பவம் குறித்து நாங்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம்' என தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இன்னும் இதுபோன்ற சாதி தீண்டாமைகள் தொடர்ந்து நிகழ்ந்து வரும் நிலையில், அதன் தொடர்ச்சியாக அமெரிக்காவிலும் இது போன்ற கொடுமைகள் அரங்கேறுவது மக்களின் நிலையை மேலும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

முன்னதாக, 2018 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மக்கள் உரிமைகள் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க பணியிடங்களில் 67 சதவீத பட்டியலின ஊழியர்கள் ஜாதி ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்