Darbar USA

“என் பையனா?.. சீரியல் தன்பாலின பலாத்கார கொலைக் குற்றவாளியா?.. அந்த வீடியோ எல்லாம்”... தாய் ஆவேசம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

லண்டன், மான்செஸ்டரில் 48 ஆண்களையும் 195 பெண்களையும் மதுவில் போதை கலந்து கொடுத்து வன்புணர்வு செய்து கொன்ற குற்றத்துக்காக, இந்தோனேசியாவை பூர்வீகமாகக் கொண்ட 36 வயதான ரெனாடு சினாஹாவுக்கு என்கிற சீரியல் பலாத்கார குற்றவாளி 30 வருட ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.

“என் பையனா?.. சீரியல் தன்பாலின பலாத்கார கொலைக் குற்றவாளியா?.. அந்த வீடியோ எல்லாம்”... தாய் ஆவேசம்!

இந்நிலையில் இதுபற்றி பேசிய, ரெனாடு சினாஹாவின் அம்மா, நார்மாவதி தன் மகன் தனக்கு குழந்தை மாதிரி என்றும்,  தன் மகன் தன்பாலின பலாத்கார குற்றவாளி என்பதையும், ஆண்களை பலவந்தத்துக்கு உட்படுத்தினான் என்பதையும் நம்புவதற்கில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில், தன் மீதான குற்றச்சாட்டை ரெனாடு சினாஹா மறுத்துள்ள நிலையில், அவரது செல்போனில் ஆண்கள் பலவந்தத்துக்கு உட்படுத்தப்படுத்தியதற்கான வீடியோ ஆதாரங்கள் உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவை எல்லாம் தனது முதுகலை ஆராய்ச்சிப் படிப்புக்காக ஆண், பெண் பாலுணர்வுகள் பற்றிய ஆவணங்கள் என்று தன் மகன் குறிப்பிட்டுள்ளதாகவும் நார்மாவதி தெரிவித்துள்ளார்.

மேலும் தன் மகன் ஒரு ஜெண்டில்மேன் என்றும், எப்போதும் புத்தகங்களில் மூழ்கியிருப்பவன் என்றும் தன் மகன் இந்த சிறை தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டு விரிவுரையாளராக தன்னுடன் வாழ்க்கையை தொடர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

REYNHARDSINAGA, MOTHER, SON