‘ஆசையா கேட்டு வாங்கிய’.. ‘கிறிஸ்துமஸ் கிஃப்ட்டை’ இப்படியா பண்ணுவ?’.. ‘7 வயது சிறுவனின் செயல்’.. அம்மாவின் வைரல் பதிவு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஜியார்ஜியாவின் அட்லாண்டாவில் 7 வயது சிறுவன் கியூஜே தன் பெற்றோர் வாங்கித் தந்த ஹெட்போனை விழுங்கியதால், மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘ஆசையா கேட்டு வாங்கிய’.. ‘கிறிஸ்துமஸ் கிஃப்ட்டை’ இப்படியா பண்ணுவ?’.. ‘7 வயது சிறுவனின் செயல்’.. அம்மாவின் வைரல் பதிவு!

இதுபற்றி அந்த சிறுவனின் அம்மா தனது சமூக ஊடகத்தில், தன் மகன் ஆசையாக கேட்டுப் பெற்ற ஏர்பாட் எனப்படும் ஹெட்போனை விழுங்கிவிட்டதாகவும், அதை ஸ்கேன் செய்து பார்த்தபோது தன் மகன் சிறு குழந்தை போல் படபடப்புடனும் பயத்துடனும் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவ சிகிச்சை மூலம், அந்த ஹெட்போனை வெளியில் எடுத்துவிட்டதாகக் கூறும், சிறுவனின் அம்மா, 7 வயதில் தன் மகன் இப்படி பயப்படுவது நியாயம்தான் எனினும் 17 வயதில் இதை நினைத்து சிரித்துக் கொண்டிருக்கக் கூடும் என்றும், இதுபற்றி இத்தனை கிரேஸியான மனநிலையுடன் பதிவு செய்யும் தன்னைப் போன்ற அம்மாக்களும் அரிதானவர்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

AIRPOD