"எலான் மஸ்க் பதவில இருந்து விலகணுமா?".. ட்விட்டர் கருத்துக் கணிப்பு முடிவால் கிறங்கி போய் கிடக்கும் நெட்டிசன்கள்!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டுள்ள கருத்துக்கணிப்பும் இதற்கு வந்த முடிவும் தற்போது உலக அளவில் வைரலாகி வருகிறது.

"எலான் மஸ்க் பதவில இருந்து விலகணுமா?".. ட்விட்டர் கருத்துக் கணிப்பு முடிவால் கிறங்கி போய் கிடக்கும் நெட்டிசன்கள்!!

Also Read | அர்ஜென்டினா அணியின் வெற்றியை கொண்டாடிய கேரள வாலிபருக்கு நேர்ந்த துயரம்!!

அமெரிக்காவில் வசித்து வரும் எலான் மஸ்க் 1971 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பிறந்தார். இவர், விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். முன்னதாக 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க மஸ்க் விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், போலி கணக்குகள் பற்றி தகவல்களை ட்விட்டர் நிறுவனம் வெளியிடவில்லை எனக் கூறி நிறுவனத்தை வாங்கும் முடிவை கைவிடுவதாக அறிவித்தார் மஸ்க்.

57 percent people want elon musk step down from twitter ceo polls

இதைத்தொடர்ந்து நீதிமன்றத்திற்கு செல்ல இருப்பதாக ட்விட்டர் நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த சூழலில் ட்விட்டரை கைப்பற்றி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார் மஸ்க். இதனிடையே, வாசனை திரவிய தொழிலும் அவர் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

அப்படி ஒரு சூழலில், ட்விட்டரை எலான் மாஸ்க் வாங்கிய பின்னர், அவரையும் ட்விட்டரையும் சுற்றி பல்வேறு பரபரப்பு சம்பவங்களும் அரங்கேறி வந்தது. ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை பதவிகளில் இருந்த நபர்களை வேலையை விட்டு நீக்கியது, ட்விட்டர் அலுவலகத்தில் பெட்ரூம் வைத்தது, ஏராளமான ஊழியர்களை பணிநீக்கம் செய்தது என எலான் மஸ்க் மேற்கொண்ட பல நடவடிக்கைகள், உலக அளவில் பேசு பொருளாக மாறி இருந்தது.

57 percent people want elon musk step down from twitter ceo polls

இந்த நிலையில் தான், ட்விட்டர் தலைமை பொறுப்பில் இருந்து விலக வேண்டுமா? இல்லையா? என்ற புதிய கருத்துக் கணிப்பு ஒன்றை எலான் மஸ்க் ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். மேலும் இந்த கருத்துக் கணிப்பு முடிவுகளுக்கு நான் கட்டுப்படுவேன் என்றும் தனது ட்வீட்டில் எலான் மஸ்க் குறிப்பிட்டிருந்தார்.

இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளில், எலான் மஸ்க் தலைமை பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்று 57. 5 சதவீதம் பேரும், விலக வேண்டாம் என 42. 5 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர். இந்த முடிவுகளுக்கு கட்டுப்படுவேன் என எலான் மாஸ்க் தெரிவித்துள்ள சூழலில், இது தொடர்பாக இன்னும் தனது முடிவை எலான் மஸ்க் அறிவிக்கவில்லை. ஆனால், அதே வேளையில், இந்த கருத்துக்கணிப்பு குறித்து ட்விட்டர் வாசிகள் குறிப்பிடும் பதிவுகளில் கமெண்ட் செய்து வருகிறார் எலான் மஸ்க். தான் தலைமை பொறுப்பில் இருந்து விலகுவாரா மாட்டாரா என்பது பற்றி இன்னும் எலான் மஸ்க் அறிவிக்கவில்லை என்ற நிலையில், இது பற்றி முடிவுகள் எடுப்பாரா என்பதை அறியவும் நெட்டிசன்கள் ஆவலாக உள்ளனர்.

Also Read | டிவி பாத்துட்டு இருந்த சிறுமி.. திடீர்ன்னு செல்ல நாய் கொடுத்த அலெர்ட்.. "இதுக்கு பேர்தான் க்ரைம் பார்ட்னர்ஷிப்பா".. செம வீடியோ!!

ELON MUSK, TWITTER CEO POLLS

மற்ற செய்திகள்