'பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்'...'ஆற்றில் கவிழ்ந்த பேருந்து'... கதறி துடித்த பயணிகள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆற்றிற்குள் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 23 பேரின் நிலை குறித்து கேள்வி குறியாகியுள்ளது.

'பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்'...'ஆற்றில் கவிழ்ந்த பேருந்து'... கதறி துடித்த பயணிகள்!

நேபாளத்தின் சர்லாஹி பகுதியில் இருந்து காத்மாண்டுக்கு பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 45 பேருக்கும் அதிகமான பயணிகள் இருந்தனர். அதிகாலை நேரம் என்பதால் அனைவரும் தூக்க கலக்கத்தில் இருந்துள்ளார்கள். பேருந்து தடிங் பகுதியில் உள்ள ஆற்று பாலத்தை கடக்கும் போது கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் கவிழ்ந்தது.

அதிகாலை நேரம் என்பதால் என்ன விபரீதம் நடக்கிறது என்பதை உணரும் முன்பே, கோர விபத்து நடந்து விட்டது. இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். மேலும் 16 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்கள். ஆற்றில் அதிகமான தண்ணீர் சென்று கொண்டிருப்பதால், 23 பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனிடையே காணாமல் போனவர்களை தேடும் பணி தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது.

ACCIDENT, NEPAL, TRISHULI