இனி 'வாட்ஸ்அப்' செயலியிலும் 'இந்த' வசதி!... அறிமுகமாகவுள்ள அசத்தலான 'புதிய' அப்டேட்...

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

வாட்ஸ்அப் நிறுவனம் அதன் செயலியின் குழு அழைப்பில் கூடுதல் நபர்களைச் சேர்க்கும் புதிய வசதியை அறிமுகம் செய்யவுள்ளது.

இனி 'வாட்ஸ்அப்' செயலியிலும் 'இந்த' வசதி!... அறிமுகமாகவுள்ள அசத்தலான 'புதிய' அப்டேட்...

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பல நிறுவனங்களின் ஊழியர்களும் வீட்டிலிருந்தே வேலை செய்து வருகின்றனர். இதையடுத்து வழக்கமாக அலுவலகத்தில் நடக்கும் மீட்டிங்குகள் தற்போது வீடியோ கால் மூலமாக நடத்தப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து குழு அழைப்பு தொடர்பான செயலிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் வாட்ஸ்அப் நிறுவனம் அதன் செயலியின் குழு அழைப்பில் கூடுதல் நபர்களைச் சேர்க்கும் புதிய வசதியை அறிமுகம் செய்யவுள்ளது. தற்போது வாட்ஸ் அப்பில் வீடியோ மற்றும் குரல் வழி அழைப்புகளில் அதிகபட்சமாக 4 பேர் வரை மட்டுமே இணைந்திருக்க முடியும் எனும் நிலையில், புதிய எண்ணிக்கை எவ்வளவு இருக்கும் என்பது குறித்து இதுவரை எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

வாட்ஸ் அப்பின் புதிய வசதிகளைத் தொடர்ந்து கண்காணித்து வரும் WABetaInfo எனும் இணையதளத்தில் இந்த தகவல் பகிரப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் வாட்ஸ்அப் குரல் வழி மற்றும் வீடியோ வழி அழைப்புகளின் பயன்பாடு 2 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.