‘என் மனைவி பிரிஞ்சி போயிட்டாங்க’... ‘அதனால, விபரீத முடிவு எடுத்து’... ‘வீடியோவாக வாட்ஸ்-அப் அனுப்பிய இளைஞர்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மனைவிப் பிரிந்து சென்ற வேதனையில் இளைஞர் ஒருவர், விஷம் குடித்த காட்சியை வீடியோவாக பதிவு செய்து உறவினர்களின் வாட்ஸ்-அப்பிற்கு அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘என் மனைவி பிரிஞ்சி போயிட்டாங்க’... ‘அதனால, விபரீத முடிவு எடுத்து’... ‘வீடியோவாக வாட்ஸ்-அப் அனுப்பிய இளைஞர்’!

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே, ஈருடையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் 30 வயதான ஆரோக்கியராஜ். இவருக்கும், நிட்டூர் கிராமத்தைச்  சேர்ந்த மாதுரி  என்பவருக்கும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அந்த பெண், கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றதால் ஆரோக்கியராஜ் கடந்த சில நாட்களாக மிகவும் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொள்வது என முடிவு செய்த அவர், கடந்த வெள்ளிக்கிழமையன்று மதுபானத்தையும், விஷத்தையும் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்ததாகத் தெரிகிறது. பின்னர் வீட்டில் உள்ள ஒரு அறைக்கு சென்ற அவர், தனது செல்போனில் வீடியோ ஒன்றை எடுத்தார். அப்போது அந்த வீடியோவில், ‘எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறியபடி தான் வாங்கி வைத்திருந்த விஷத்தை மதுவுடன் கலந்து குடிக்கும் காட்சி பதிவாகியிருந்தது’.

மேலும் அந்த வீடியோ பதிவை தனது உறவினர் ஒருவரின் வாட்ஸ்-அப்பிற்கு ஆரோக்கியராஜ் அனுப்பினார். இதற்கிடையே அவர் விஷம் குடித்த சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்தார். வாட்ஸ்-அப் காட்சியை பார்த்த உறவினர் உடனடியாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார். அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வீட்டில் உள்ள அறையில் மயங்கி கிடந்த ஆரோக்கியராஜை மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி கடந்த சனிக்கிழமையன்று ஆரோக்கியராஜ் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மூங்கில் துறைப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தான் விஷம் குடிப்பதை வீடியோ எடுத்து உறவினரின் செல்போன் எண்ணுக்கு அனுப்பி விட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SUICIDE, VILLUPURAM, WHATSAPP, VIDEOCALL