asuran USA HOME

‘நடுரோட்டில் போலீஸ் தடுத்தும்’... ‘இளைஞருக்கு நேர்ந்த பதைபதைப்பு காட்சிகள்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

விழுப்புரம் அருகே போலீசார் தடுத்தும், அவர்களது கண்முன்னே நடுரோட்டில் இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘நடுரோட்டில் போலீஸ் தடுத்தும்’... ‘இளைஞருக்கு நேர்ந்த பதைபதைப்பு காட்சிகள்’!

விழுப்புரம் வளவனூர் அருகே உள்ள வி.கெங்கராம்பாளையத்தை சேர்ந்தவர் இளநீர் வியாபாரி அய்யப்பன் (33).  இவர் கடந்த சனிக்கிழமையன்று மாலை, தன் வீட்டருகே நின்று ஆபாசமாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதனை பக்கத்து வீட்டைச் சேர்ந்த தணிகைராஜ் (27) என்பவர் தட்டிக் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றியநிலையில், இளைஞர் தணிகைராஜை, இளநீர் அரிவாளால் ஓட ஓட விரட்டி வெட்டியுள்ளார் அய்யப்பன். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த வளவனூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் மணிகண்டனும், மற்றொரு காவலரும் இளநீர் வியாபாரி அய்யப்பனை தடுக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர்களையும் மீறி தணிகைராஜை வெட்டி அய்யப்பன் படுகொலை செய்தார்.

தாக்குதலை தடுக்க முயன்ற, காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் கையில் வெட்டு காயம் ஏற்பட்டதையடுத்து, அவருக்கு முண்டியப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.  இந்நிலையில் கொலையாளி அய்யப்பனை போலீசார் கைது செய்துள்ளனர்.  இந்தசம்பவத்தின் செல்போன் வீடியோ காட்சிகள் நியூஸ்7 சேனலில் வெளியாகியுள்ளது.

SI, POLICE, VILLUPURAM