"இன்ஸ்டாகிராம் ஐடியில் பழக்கமான பெண் செய்த காரியம்!".. மனமுடைந்த 'இளைஞர்' எடுத்த 'விபரீத' முடிவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தனியார் வங்கிகளின் ஏ.டி.எம்களில் பணம் நிரப்பும் பணி செய்யும் ஊழியராக இருந்து வந்தவர் சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியைச் சேர்ந்த ஆனந்தகுமார்.

"இன்ஸ்டாகிராம் ஐடியில் பழக்கமான பெண் செய்த காரியம்!".. மனமுடைந்த 'இளைஞர்' எடுத்த 'விபரீத' முடிவு!

இவர், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே காட்டூர் கைலாஷ்நகர் காந்திநகரில் உள்ள தனது மாமா செந்தில்குமார் என்பவரது வீட்டுக்கு கடந்த 2 மாதத்திற்கு முன்பு சென்றதோடு ஊரடங்கு காரணமாக தனது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல், மாமா வீட்டிலேயே தங்கியிருந்துள்ளார்.

அப்போது வீட்டில் இருந்து பொழுதுபோக்குக்காக  இன்ஸ்டாகிராமில் முகம் தெரியாத பெண்ணின் பெயரில் செயல்பட்டு வரும் ஐடி ஒன்றுடன் பேசிப் பழகியுள்ளார்.  இந்தத் தொடர் பழக்கம் காதலாக மாற, ஆனந்தகுமாரிடம் பேசிப்பழகியது, பெண் தானா என்பது உறுதியாக தெரியாத நிலையில், நேற்று முன்தினம் ஆனந்தகுமாரின் காதலை நிராகரித்து, இன்ஸ்டாகிராம் கணக்கில் ஆனந்தகுமாரை பிளாக் செய்துவிட்டதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த ஆனந்தகுமாரை அவரது உறவினர்கள் சமாதானப்படுத்தியும், மனம் கேட்காத ஆனந்தகுமார் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்த திருவெறும்பூர் காவல் நிலைய அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

மற்ற செய்திகள்