“அப்படினா நீ உயிரோடவே இருக்க வேணாம்!”.. இரும்பு ராடால் 17 வயது சிறுமியை ஓங்கி அடித்த இளைஞர்... அடுத்த நொடி செய்த கொலைநடுங்கும் காரியம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

காதலிக்க மறுப்பு தெரிவித்த சிறுமியை இளைஞர் ஒருவர் இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு, தானும் மின்கம்பியை பிடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

“அப்படினா நீ உயிரோடவே இருக்க வேணாம்!”.. இரும்பு ராடால் 17 வயது சிறுமியை ஓங்கி அடித்த இளைஞர்... அடுத்த நொடி செய்த கொலைநடுங்கும் காரியம்!

திருவண்ணாமலையில் உள்ள கீழ் பென்னாத்தூர் அருகே, உள்ள கிராமத்தில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்த பிரசாந்த் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது பெண்ணிடம் காதலிப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு அப்பெண் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பிரசாந்த், தான் வைத்திருந்த இரும்புக் கம்பியால் அப்பெண்ணை சரமாரியாகக் குத்தியதோடு, அருகில் இருந்த மின்கம்பத்தில் ஏறி மின்கம்பியைப் பிடித்துள்ளார். இதனால் மின்சாரம் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

அதன்பிறகு சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  பிரசாந்தின் பிரேதத்தை மீட்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்