'நீ நாசமா போய்டுவ'... 'அவன் சாகுறதுக்கு இதுதான் காரணம்'... சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இளைஞரின் மரணத்திற்கு எதிர்வீட்டு பெண் சாபம் கொடுத்ததே காரணம் என கூறி, இறந்த இளைஞரின் நண்பர்கள் பெண்ணின் வீட்டை அடித்து நொறுக்கிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'நீ நாசமா போய்டுவ'... 'அவன் சாகுறதுக்கு இதுதான் காரணம்'... சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்!

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராணி. இவர் தனது அன்றாட பிழைப்பிற்காக தனது வீட்டு வாசலில் டிபன் கடை நடத்தி வந்துள்ளார். ராணி டிபன் கடை நடத்துவதற்கு இளையகணேசன் என்பவர் ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் அவ்வப்போது பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக இருவரும் ஒருவர் மீது ஒருவர் புளியந்தோப்பு போலீசில் புகார் கொடுத்துள்ளனர். ஒரு கட்டத்தில்  பிரச்சனை அதிகமாக ராணியால் டிபன் கடை நடத்த முடியாத சூழ்நிலை உருவானது.

இதற்கு இளையகணேசன் குடும்பம் தான் காரணம் என கருதிய ராணி, ஆத்திரத்தில் இளையகணேசன் குடும்பத்தினர் நாசமாக போகட்டும் என்று சாபம் விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இளையகணேசனின் மகன் சதீஷ்க்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இது அவரது நண்பர்களுக்கு கடும் அதிர்ச்சியை அளித்தது. சதீஷின் மரணத்திற்கு ராணி விட்ட சாபமே காரணம் என கருதிய அவர்கள், 10க்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து ராணியின் வீட்டை அடித்து நொறுக்கினர்.

இதையடுத்து ராணியின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தாக்குதல் தொடர்பாக புளியந்தோப்பு போகிபாளையத்தை சேர்ந்த டேவிட் என்ற ராஜா, ஜவகர் மற்றும் 17 வயது சிறுவனைக் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 10க்கும் மேற்பட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. .

VADACHENNAI, TAMILNADUPOLICE, PULIANTHOPE, ATTACKED, CHENNAI