‘நள்ளிரவில் பைக்கில்’... ‘ஹெல்மெட் அணியாமல்’... 'இளைஞர்களுக்கு நேர்ந்த பயங்கரம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருவண்ணாமலை அருகே 3 இளைஞர்கள் சென்ற இருசக்கர வாகனத்தை மோதிவிட்டு, வாகனம் ஒன்று நிற்காமல் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘நள்ளிரவில் பைக்கில்’... ‘ஹெல்மெட் அணியாமல்’... 'இளைஞர்களுக்கு நேர்ந்த பயங்கரம்'!

தண்டராம்பட்டு அடுத்த திருவடத்தனூரை சேர்ந்தவர் 20 வயதான தாகீர். அதேப் பகுதியை சேர்ந்தவர்கள் காலித் (25) மற்றும் ஷாஜித் (24). இவர்கள் 3 பேரும் நள்ளிரவு, திருவண்ணாமலையில் இருந்து வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். கீழ்சிறுப்பாக்கம் என்ற இடத்தில் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. எதிர்பாரதவிதமாக வாகனம் மோதியதில், பைக்கில் இருந்து 3 பேரும் தூக்கிவீசப்பட்டனர். இதில் கலித், ஷாகிர் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், படுகாயங்களுடன் திருவண்ணாமலை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாகித் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒரே வாகனத்தில் 3 பேர் சென்றதும், தலைக் கவசம் அணியாததும் உயிரிழப்புக்கு காரணமாக கூறப்படுகிறது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த தண்ராம்பட்டு போலீசார், விபத்தை ஏற்படுத்திச் சென்ற வாகனம் மற்றும் நபர்களை தேடி வருகின்றனர்.

ACCIDENT, THIRUVANNAMALAI