‘காணாமல் போன திருமணமான இளம்பெண்’... ‘இளைஞரின் வாக்குமூலத்தால்’... 'அதிர்ந்துபோய் நின்ற குடும்பம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பணம் தராத ஆத்திரத்தில், இளைஞர் ஒருவர், திருமணமான இளம்பெண்ணை கொலை செய்து, ரயில் தண்டவாளத்தில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘காணாமல் போன திருமணமான இளம்பெண்’... ‘இளைஞரின் வாக்குமூலத்தால்’... 'அதிர்ந்துபோய் நின்ற குடும்பம்’!

புதுக்கோட்டை மாவட்டம் கடுக்காகுறிச்சியைச் சேர்ந்தவர் ரெங்கசாமி. இவரது மனைவி 30 வயதான சிவரெத்தினம். இவர்களுக்கு திருமணமாகி, 12 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனால் சிவரெத்தினம் சமயபுரம் அருகே நரசிங்கமங்கலத்தில் உள்ள தனது அண்ணன் வீட்டில், மகனை விட்டுவிட்டு, திருப்பூர் வெள்ளக்கோவிலில், ஒரு டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

பின்னர், 10 நாட்களுக்கு ஒருமுறை, தனது மகனை பார்க்க, சமயபுரத்திற்கு அவர் வந்து செல்வார். இதற்கிடையில், சில ஆண்டுகளுக்கு முன்பு கணவர் ரெங்கசாமி இறந்துவிட்டார். கடந்த சில நாட்களாக சிவரெத்தினம் வராததை கண்டு, அவருடைய அண்ணன், வெள்ளக்கோவிலில் சிவரெத்தினம் வேலை பார்த்த இடம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் அவரைப்பற்றி விசாரித்தார். அவர் எங்கே சென்றார் என தெரியாமால் அதிர்ச்சியடைந்த அவர், கடந்த 16-ந் தேதி சமயபுரம் காவல் நிலையத்தில், மாயமான சிவரெத்தினத்தை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்தார்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிவரெத்தினத்தின் செல்போனை ஆராய்ந்து பார்த்ததில், அவருக்கு கடைசியாக வந்த செல்போன் எண்ணை வைத்து விசாரித்தனர். அதில், திருவண்ணாமலை தண்டராம்பட்டு பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஏழுமலை என்பவர் அடிக்கடி பேசி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்று, வீட்டில் பதுங்கியிருந்த ஏழுமலையை பிடித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், சிவரெத்தினம் வேலைப்பார்த்த டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் ஏழுமலையும் வேலைப்பார்த்து வந்தார்.

அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது. இதைத்தொடர்ந்து வெள்ளக்கோவிலில் இருந்து திருவண்ணாமலைக்கு, சிவரெத்தினத்தை அடிக்கடி, தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார் ஏழுமலை.  மேலும் சிவரெத்தினத்திடம் செலவுக்கு அடிக்கடி பணமும் பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பணம் கேட்டபோது, சிவரெத்தினம் மறுக்கவே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஏழுமலை, அவரை அடித்து கொலைசெய்துள்ளார்.

இதனை மறைப்பதற்காக, அவரது உடலை தண்டராம்பட்டு அருகில் உள்ள பச்சக்குப்பம் என்ற ரெயில் நிலைய தண்டவாளத்தில் வீசி சென்றுள்ளார். சிவரெத்தினம் காணாமல் போனது தொடர்பாகத் தேடி வந்த அவரது பெற்றோர் மற்றும் சகோதரன், அவர் உயிரோடு இருப்பதாகவே நம்பியிருந்தனர். ஏழுமலையின் வாக்குமூலத்தைக் கேட்டு, சிவரெத்தினம் கொலை செய்யப்பட்டது தெரிந்து, அவரது உறவினர்கள் கதறி அழுதனர். இதையடுத்து ஏழுமலையை, போலீசார் கைதுசெய்தனர்.

MURDER, TRICHY, THIRUVANNAMALAI