'அம்மா வயிறு வலிக்குது, வா ஹாஸ்பிடல் போலாம்'... 'டாக்டர் சொன்ன பகீர் தகவல்'... 'சிறுமி கைகாட்டிய நபர்'... அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுத்த சிறுமி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

படிக்கின்ற வயதில் இருக்கும் சிறுமிகளை சில இளைஞர்கள் ஆசை வார்த்தை கூறி தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதும், அவர்களை நம்பி படிப்பை மறந்து செல்லும் சிறுமிகள் இறுதியில் எவ்வளவு பெரிய சிக்கலில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது இந்த சம்பவம்.

'அம்மா வயிறு வலிக்குது, வா ஹாஸ்பிடல் போலாம்'... 'டாக்டர் சொன்ன பகீர் தகவல்'... 'சிறுமி கைகாட்டிய நபர்'... அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுத்த சிறுமி!

கோவையை அடுத்த காரமடை அருகே உள்ள தேரம்பாளையம் எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவருடைய மகன் சிவலிங்கம். 26 வயது இளைஞரான இவருக்கும் அந்த பகுதியைச் சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. படிக்கின்ற சிறுமி என்பது தெரிந்தும் அந்த இளைஞர் அந்த சிறுமியுடன் பழகியுள்ளார். சிறுமியும் அந்த இளைஞர் கூறிய ஆசை வார்த்தைகளை நம்பி அவருடன் நெருக்கமாகப் பழகியுள்ளார். இந்த சூழ்நிலையில் சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள்.

அப்போது சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர் அவர் கர்ப்பமாக இருப்பதைப் பார்த்து அதிர்ந்து போனார். சிறுமி கர்ப்பமாக இருக்கும் தகவலை அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அந்த சிறுமியின் பெற்றோர் உடைந்து போனார்கள். 9ம் வகுப்பு படிக்கும் மகளை இந்த நிலைக்கு ஆளாக்கியது யார் எனக் கேட்டு அழுதார்கள். அப்போது சிறுமி 26 வயது இளைஞரான சிவலிங்கம் தான் இதற்குக் காரணம் எனக் கூறியுள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி நெருக்கமாக இருந்ததாகச் சிறுமி கூறியுள்ளார்.

மகள் கூறியதைக் கேட்டு அதிர்ந்து போன சிறுமியின் பெற்றோர், உடனே சிவலிங்கத்தின் வீட்டிற்குச் சென்று முறையிட்டுள்ளார்கள். அப்போது நடந்ததை ஒப்பு கொண்ட சிவலிங்கம், சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறியுள்ளார். இதனைச் சிறுமியின் பெற்றோரும் ஏற்றுக் கொள்ள, நாளை இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளும் நடந்தது. இந்த சூழ்நிலையில் சிறுமியைப் பரிசோதனை செய்த மருத்துவமனை நிர்வாகம் சார்பில் சைல்டு லைன் அமைப்பிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்த புகாரின் பேரில், கோவை உக்கடம் டான்போஸ்கோ காப்பக நிர்வாகி ஏஞ்சலின் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சிறுமியிடமும் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது குறித்து துடியலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இன்று திருமணம் செய்யவிருந்த புதுமாப்பிள்ளை சிவலிங்கத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்கள்.

இதற்கிடையே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, அவரை நாளை திருமணம் செய்ய இருந்த நிலையில், புதுமாப்பிள்ளை போக்சோவில் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்