Darbar USA

'காதலரிடம்' இருந்து... வலுக்கட்டாயமாக 'பிரித்த' பெற்றோர்... சோகத்தில் இளம்பெண் எடுத்த 'விபரீத' முடிவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

காதலரிடம் இருந்து பெற்றோர் வலுக்கட்டாயமாக பிரித்ததால், சோகத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

'காதலரிடம்' இருந்து... வலுக்கட்டாயமாக 'பிரித்த' பெற்றோர்... சோகத்தில் இளம்பெண் எடுத்த 'விபரீத' முடிவு!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்த ஆஷா(19) என்னும் இளம்பெண்ணும், அதே பகுதியை சேர்ந்த ரஜினி என்ற வாலிபரும் காதலித்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த மாதம் ஆஷா வீட்டைவிட்டு வெளியேறி ரஜினி வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்தநிலையில் நேற்று ரஜினி வேலைக்கு சென்று விட்டதால், வீட்டில் ஆஷா தனியாக இருந்துள்ளார். அப்போது அங்குவந்த ஆஷா பெற்றோர் அவரை வலுக்கட்டாயமாக தங்களது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். இதனால் விரக்தியடைந்த ஆஷா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.