'எனக்கே விபூதி அடிக்க பார்த்தல்ல'... 'இளைஞரை கட்டுன லுங்கியோட இழுத்துக்கொண்டு வந்த காதலி'... பரபரப்பு சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

காதலித்து ஏமாற்ற நினைத்த காதலனுக்கு அவரது காதலி தக்க பாடத்தைக் கற்பித்துள்ளார்.

'எனக்கே விபூதி அடிக்க பார்த்தல்ல'... 'இளைஞரை கட்டுன லுங்கியோட இழுத்துக்கொண்டு வந்த காதலி'... பரபரப்பு சம்பவம்!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த, சின்னாத்து குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சுகுனா. இவரும் அரியலூர் மாவட்டம் பெரியாத்துகுறிச்சையை சேர்ந்த மணி்வேல் என்பவரும் பல ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த போது பழக்கம் ஏற்பட்ட நிலையில், கொரோனா பொது முடக்கம் காரணமாக இருவருக்கும் வேலை பறிபோனது.

இதனால் இருவரும் சொந்த ஊருக்குச் சென்ற நிலையில், அவ்வப்போது தனிமையில் சந்தித்து கொண்டார்கள். இதனால் சுகுனா கர்ப்பமடைந்தார். உடனே தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும், வீட்டிற்குத் தெரிந்தால் பெரிய பிரச்சனை ஆகி விடும் என சுகுனா கூறியுள்ளார்.

ஆனால் ஆரம்பத்தில் சம்மதம் தெரிவித்த மணிவேல் இறுதியில், சொத்திற்கு ஆசைப்பட்டு, தன்னுடைய உறவுக்கார பெண்ணை திருமணம் செய்து கொள்ள முயன்று வந்துள்ளார். இதை அறிந்த சுகுணா உடனடியாக விருத்தாச்சலம் காவல்நிலையத்தில், தன்னுடைய காதலனுடன் சேர்த்து வைக்கும் படி புகார் அளித்துள்ளார்.

Young girl married her boyfriend with the help of police in cuddalore

புகாரின் பேரில், கட்டியிருந்த லுங்கியுடன் மணிவேலை போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்து வர, அப்போது போலீசார்  திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால், நிச்சயம் சிறைக்குத் தான் நீ செல்ல வேண்டும் என்று எச்சரித்துள்ளனர்.

அதன் பின் மணிவேல் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ள, அங்கிருந்த அம்மன் கோவிலில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. காதலித்து ஏமாற்ற நினைத்த காதலனுக்குக் காதலி தக்க பாடம் புகட்டி அவரை திருமணம் செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்