'காலையில வாக்கிங் போற நேரம்'... 'சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்'... பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இளம்பெண்ணின் பதிவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் 23 வயது இளம்பெண் ஒருவர் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'காலையில வாக்கிங் போற நேரம்'... 'சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்'... பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இளம்பெண்ணின் பதிவு!

சென்னை முகலிவாக்கத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் கடந்த வியாழக்கிழமை காலை நடைப்பயிற்சிக்கு சென்றுள்ளார். அப்போது அந்த பகுதில் இருந்த சிலர் அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், ஆன்லைன் மூலமாக எஸ்.ஆர்.எம்.சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் புகார் குறித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து தானே களத்தில் இறங்கிய அந்த பெண், அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து அதிலிருந்த ஆதாரங்களை திரட்டினார். அந்த ஆதாரங்களை வைத்து விசாரணை மேற்கொண்ட அந்த இளம்பெண், தனக்கு நடந்தது குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ''நடைபயிற்சி மேற்கொள்ளும் போது அங்கு தான் மட்டுமல்லாது பல பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், தானே விசாரணை மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை கண்டுபிடிக்கும் பட்சத்தில் நான் என்ன செய்ய வேண்டும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Young girl face harassment while going for a walk in chennai

நமது நாட்டில் பசு மாடுகளுக்கு இருக்கும் பாதுகாப்பது பெண்களுக்கு இல்லை எனவும் வேதனை தெரிவித்துள்ளார். இளம்பெண்ணின் இந்த பதிவு காவல்துறையின் கவனத்திற்கு சென்ற நிலையில், அந்த பெண்ணை தொடர்பு கொண்ட காவல்துறையினர் அவர் சேகரித்த ஆதாரங்களை திரட்டினர். இளம்பெண்ணின் தைரியமான இந்த செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

மற்ற செய்திகள்