"பட்டாசு ஆலையில் திடீர் வெடிவிபத்து!".. ‘அலறி ஓடிய தொழிலாளர்கள்’.. ஒரு அறையில் இருந்த 3 பெண்கள் உட்பட 5 பேருக்கு நேர்ந்த பெரும் சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

விருதுநகர் அருகே எரிச்சநத்தத்தில் உள்ள ராஜலட்சுமி ஃபயர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

"பட்டாசு ஆலையில் திடீர் வெடிவிபத்து!".. ‘அலறி ஓடிய தொழிலாளர்கள்’.. ஒரு அறையில் இருந்த 3 பெண்கள் உட்பட 5 பேருக்கு நேர்ந்த பெரும் சோகம்!

மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட எல்லையில் உள்ள மாநகனேரி பகுதியில் செயல்படு ராஜலட்சுமி ஃபயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலையில் வழக்கம் போல் இன்று 100க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென உண்டான உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது.  அப்போது அங்கிருந்த பட்டாசு தொழிலாளர்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர்.

ஆனாலும் ஒரு  அறையில் பணிபுரிந்து கொண்டிருந்த 3 பெண்கள் உள்ளிட்ட 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகி இருப்பதாக முதற்கட்ட காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.  இதனை அடுத்து விருதுநகரில் இருந்தும் திருவில்லிபுத்தூரில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை முழுமையாக அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அத்துடன் சிலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்