வீட்டுக்குள்ள பேய் வந்திடுச்சு.. வெளியுலகத்துக்கே வராம வீட்டுக்குள்ளேயே முடங்கிய இளம்பெண்.. மீட்க போன போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருச்சி அருகே வீட்டிற்குள் பேய் வந்துவிட்டதாக நினைத்து பல நாட்களாக வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே இருந்த இளம் பெண்ணை காவல்துறை மீட்டிருக்கிறது.

வீட்டுக்குள்ள பேய் வந்திடுச்சு.. வெளியுலகத்துக்கே வராம வீட்டுக்குள்ளேயே முடங்கிய இளம்பெண்.. மீட்க போன போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

போலீசார்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ளது மேலமஞ்சம்பட்டி கிராமம். இங்கே வசித்துவரும் மார்க்ரெட் என்னும் பிஎஸ்சி.பிஎட் பட்டதாரி பெண் கடந்த சில தினங்களாக வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் அச்சமடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்து உள்ளனர்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல்துறை அதிகாரிகள் அந்த இளம் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். அவருடைய வீட்டில் இருந்த வித்தியாசமான பொருட்கள் போலீசாருக்கு சந்தேகத்தை அளித்து இருக்கின்றன. இது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் காவல்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து உள்ளன.

Women rescued by police after she did not eat over days

பேய்

மேலமஞ்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சவேரியம்மாள். ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மரணமடைந்திருக்கிறார். அவருடைய ஒரே மகளான மார்க்ரெட் திருமணம் செய்துகொள்ளவில்லை. இந்நிலையில், இறந்துபோன தனது தாய் வீட்டிற்குள் ஆவியாக புகுந்து பில்லி, சூனியம் வைப்பதாக மார்க்ரெட் நம்பியதாக சொல்லப்படுகிறது.

இதனால் அச்சம் அடைந்த அந்த பெண் தனது சித்தி ஆரோக்கியம்மாள் உடன் இருந்திருக்கிறார். பேய் பயம் காரணமாக வீட்டிற்கு பின்புறம் உள்ள பகுதியில் வசிக்க துவங்கிய அந்த பெண் கடந்த சில நாட்களாக சாப்பிடாமல் இருந்து உள்ளார்.

Women rescued by police after she did not eat over days

அதிர்ந்த போலீஸ்

இளம்பெண் ஒருவர் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதாக தகவல் அறிந்த மணப்பாறை காவல்துறையினர் விரைந்து வந்தனர். வீட்டிற்குள் சென்ற காவல்துறை அதிகாரிகள் மயக்க நிலையில் இருந்த பெண் மற்றும் அவரது சித்தியை மருத்துவமனைக்கு வரும்படி கூறியுள்ளனர். அதற்கு "நாங்கள் இங்கேயே இருந்துகொள்கிறோம். எங்கும் வரவில்லை" என ஆரோக்கியம்மாள் மறுத்துவிட்டார்.

ஆனாலும், தொடர்ந்து காவல்துறை அளித்த வற்புறுத்தலின் அடிப்படையில் இருவரும் மருத்துவமனைக்கு செல்ல சம்மதித்து உள்ளனர். அதன்படி, 108 ஆம்புலன்சில் இருவரையும் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள்.

Women rescued by police after she did not eat over days

பெண்ணின் வீட்டிற்குள் மஞ்சள் பூசிய எலுமிச்சம்பழம், தேங்காய் என வித்தியாசமான பொருட்கள் இருப்பதையும் காவல்துறையினர் கண்டுபிடித்திருக்கின்றனர். மேலும், உறவினர் யாரையும் வீட்டிற்குள் அனுமதிக்காமல் பெண்ணும் அவரது சித்தியும் தனிமையில் இருந்ததும் அக்கம் பக்கத்தினரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

மணப்பாறை அருகே, வீட்டிற்குள் இறந்து போன தாய் பேயாக வந்துவிட்டதாக கருதி இளம்பெண் ஒருவர் சாப்பிடாமல் இருந்து போலீஸாரால் மீட்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

TRICHY, MANAPARAI, GHOST, POLICE, திருச்சி, மணப்பாறை, பேய்

மற்ற செய்திகள்