Naane Varuven M Logo Top

1½ வருஷத்தில் 6 திருமணம் செய்த பெண்.. "இதுக்காக தான் நான் அப்டி பண்ணேன்".. பரபரப்பை கிளப்பிய வாக்குமூலம்!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சந்தியா என்ற பெண் ஒருவர், 7 ஆவது திருமணத்திற்கு முயன்ற நிலையில், அவர் அளித்த வாக்குமூலத்தின் மூலம் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது.

1½ வருஷத்தில் 6 திருமணம் செய்த பெண்.. "இதுக்காக தான் நான் அப்டி பண்ணேன்".. பரபரப்பை கிளப்பிய வாக்குமூலம்!!

Also Read | "நிம்மதியே இல்ல".. முதல்வரை பாக்க வீட்டில் இருந்து தனியாக சென்ற மாணவன்.. கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்.!!!

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தனபால் மற்றும் சந்தியா ஆகிய இருவருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. மேலும் இந்த திருமணத்தை புரோக்கர் ஒருவர் ஏற்பாடு செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது. அதே போல, திருமணத்திற்கு பெண் வீட்டார் சார்பில் இருவர் மட்டுமே கலந்து கொண்டிருந்தனர்.

திருமணமான இரண்டு நாட்களில், வீட்டில் இருந்த நகை, பணம் உள்ளிட்ட பொருட்களுடன் சந்தியா மாயமாகி உள்ளார். இதனால், புது மாப்பிள்ளை தனபால் அதிர்ந்து போகவே, போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றையும் அவர் அளித்துள்ளார்.

Woman who cheat and married six persons revealed the reason

அப்படி இருக்கையில், அடுத்த திருமணம் ஒன்றிற்கு சந்தியா தயாராகி வருவது பற்றயும் தனபாலுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் பின்னர், திட்டம் போட்டு சென்ற தனபால், சந்தியா உள்ளிட்ட அவருடன் இருந்தவர்களை மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். அப்போது, ஏற்கனவே 6 திருமணம் செய்து கொண்ட சந்தியா, 7 ஆவது திருமணத்திற்கு முயன்ற போது சிக்கியதும் தெரிய வந்தது. மேலும், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 6 பேரை சந்தியா திருமணம் செய்து கொண்டதும் விசாரணையில் தெரிந்தது.

இதனிடையே, போலீசாரிடம் சந்தியா அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் தொடர்பான தகவல் ஒன்று வெளியாகி இன்னும் பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது.

Woman who cheat and married six persons revealed the reason

அதன்படி, திருமண புரோக்கர் பாலமுருகன் என்பவர் அவரது கூட்டாளிகளான ரோஷ்னி, மாரிமுத்து ஆகியோருடன் இணைந்து சந்தியாவை தனிப்பட்ட முறையில், புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வைத்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் மோசடி திருமணத்திற்கு சம்மதிக்காவிட்டால், இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவதாகவும் அவர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதே போல இன்னும் 4 பெண்கள் அவர்களிடம் சிக்கி உள்ளதாக சந்தியா தெரிவித்ததாக தகவல்கள் குறிப்பிடும் நிலையில், திருமணத்திற்கு தயாராக இருக்கும் இளைஞர்களிடம் பாசமாக பழகி அவர்களிடம் இருந்து செல்போன், பணம், நகை, உள்ளிட்ட பொருட்களை வாங்கி புரோக்கர் உள்ளிட்ட கும்பலிடமும் சந்தியா கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

Woman who cheat and married six persons revealed the reason

அதே போல, தனக்கு திருமணம் நடக்கும் போது கூட அந்த புகைப்படத்தில், புரோக்கர்கள் தள்ளி நிற்பார்கள் என்றும் சந்தியா குறிப்பிட்டுள்ளார். நாமக்கல், கரூர் உள்ளிட்ட பல இடங்களில் தன்னை திருமண மோசடிக்காக அவர்கள் பயன்படுத்தியதையும் சந்தியா குறிப்பிட்டுள்ளார். திருமண மோசடியில் தன்னை பாலமுருகன் சிக்க வைத்து விட்டார் என்றும் சந்தியா தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.

சந்தியா அளித்த வாக்குமூலத்தின் பெயரில், புரோக்கர் பாலமுருகன் உள்ளிட்ட அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Also Read | 6 ஆவது திருமணம் முடிந்த 15 நாட்களுக்குள்.. 7 ஆவது திருமணத்திற்கு ரெடி ஆன பெண்.. கட்டம் கட்டி தூக்கிய 6 ஆவது கணவர்

WOMAN, CHEAT, MARRIED

மற்ற செய்திகள்