COBRA M Logo Top

திருமணம் தாண்டிய உறவு.. பல நாட்களாக காணாமல் போன பெண்.. கணவருக்கு வந்த அழைப்பில் காத்திருந்த 'அதிர்ச்சி' தகவல்!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் காணாமல் போன நிலையில், அவர் தொடர்பாக தெரிய வந்த தகவல், கடும் அதிர்ச்சியை உண்டு பண்ணி உள்ளது.

திருமணம் தாண்டிய உறவு.. பல நாட்களாக காணாமல் போன பெண்.. கணவருக்கு வந்த அழைப்பில் காத்திருந்த 'அதிர்ச்சி' தகவல்!!

Also Read | 3 வாரமா நடந்த 'ஆய்வு'.. 13 ஆம் நூற்றாண்டு'ல இருந்த இடம் பத்தி தெரிய வந்த உண்மை.. மிரண்டு போன ஆய்வாளர்கள்

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் பகுதியை எடுத்த எருமைவெட்டிப்பாளையம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு. 36 வயதாகும் இவர், பள்ளி பேருந்து ஓட்டுனராக வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.

இவருக்கு அமுதா என்ற பெண்ணுடன் திருமணமான நிலையில், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

இதனிடையே, பாபு மனைவியான அமுதாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அது மட்டுமில்லாமல், இதன் காரணமாக ஏற்கனவே அமுதாவும் அந்த வாலிபரும் வீட்டை விட்டு இரண்டு முறை வெளியேறி சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி வீட்டை விட்டு வெளியேறி சென்றவர்களை இரண்டு முறை மீண்டும் அழைத்து வந்த குடும்பத்தினர், பாபுவுடன் இணைந்து வாழும் படி அமுதாவை கட்டாயப்படுத்தி உள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக அதிகம் விரக்தியில் இருந்த அமுதா, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக மீண்டும் ஒருமுறை வீட்டை விட்டு வெளியேறி சென்றதாக சொல்லப்படுகிறது.

அப்படி சென்ற அமுதா அதன்பின் வீடு திரும்பவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் மனைவியை பல்வேறு இடங்களில் தேடி வந்த பாபு அதிகம் கவலை கொண்டுள்ளார். அப்படி ஒரு சூழ்நிலையில் தான் பாபுவின் நண்பர் ஒருவர் மூலம் மனைவி அமுதா இருக்கும் இடம் குறித்து பாபுவுக்கு தகவல் தெரிந்திருக்கிறது. அவர் சொன்ன இடத்தில் பாபு சென்று பார்த்துள்ளார். கணவர் பாபுவை பார்த்த அமுதா, தான் நம்பி சென்ற வாலிபர் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் எங்கேயாவது சென்று உயிரிழந்து விடுமாறு கூறியதாகவும் அதனால் அதிக மன உளைச்சல் இருப்பதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அப்படி இருக்கையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக மீண்டும் பாபு நண்பர் அழைத்து ஒரு அதிர்ச்சிகரமான தகவலை கூறியுள்ளார் அதன்படி திருவள்ளூரை அடுத்துள்ள பெரியகுப்பம் கம்பர் தெருவில் உள்ள வீடு ஒன்றில் அமுதா இறந்து கிடப்பதாக தகவல் கொடுத்துள்ளார். அங்கே சென்று பார்த்த பாபு மற்றும் குடும்பத்தினர், அழகிய நிலையில் இறந்து கிடந்த அமுதாவைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மனைவி நிலை கண்டு கதறி துடித்த பாபு, தனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்துள்ளார்.

இதன் பின்னர் போலீசார் அமுதாவின் உடலை கைப்பற்றி மறுபரித பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அவர் உயிரிழந்ததற்கான காரணம் தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் முதற்கட்ட விசாரணையில், அமுதா நம்பிச் சென்ற வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Also Read | நாசாவின் ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் வெளியிட்ட 'Phantom Galaxy'-யின் திகைக்க வைக்கும் புகைப்படம்.. வெளிச்சத்துக்கு வந்த பல வருஷ மர்மம்..!

WOMAN, MISSING CASE, HUSBAND, HOUSE

மற்ற செய்திகள்